- Wednesday
- May 14th, 2025

அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடானது அளுத்கம சுகாதார பரிசோதகரிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மற்றொரு...

பிரான்ஸின் ரியூனியன் தீவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த 07 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்கள் நேற்று (18.09.2023) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் பிரதேசங்களில் வசிப்பவர்கள், அவர்களில் 6 பேர் தமிழர்கள் மற்றும் மற்றைய நபர் சிங்களவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதிகள்...

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரண தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடகொரிய ஜனாதிபதி கிம்...

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுதினமும் வியாழக்கிழமையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி.தர்சன் அறிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும் என்றும் அரச வைத்திய...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது, பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவு பிறத்துள்ளது. குறித்த ஊர்திப் பவனி வவுனியாவிற்கு வந்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன்,...

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது இன்று (திங்கட்கிழமை) யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலமையில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆர்.கஜன் அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக...

திருகோணமலை சர்தாபுர பகுதியில் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனன் குடா பொலிஸாரினால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்லைப்படுத்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு பகுதியில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அடக்குமுறை சம்பங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இனவாத செயற்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இந்த...

தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் - ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டும். ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம்...

திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் இன்று அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர். தாக்குதலிற்குள்ளானவர்கள் தொடர்ந்தும் பயணிப்பதில் அச்சறுத்தல் காணப்பட்ட நிலையிலேயே இன்று பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இதேவேளை, இன்று முல்லைத்தீவிலிருந்து வாகன ஊர்தி அஞ்சலிக்காகப் பயணத்தை ஆரம்பிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் இருக்கின்றது என்பதை இன்னுமொருமுறை இந்த தாக்குதல் சம்பவம் நிரூபணம் செய்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்டில்...

திலீபனின் உருவப்படம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக...

யாழ்ப்பாணம் வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. இக்கட்டுமானப் பணிக்காக யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பணத்தை ஆலய...

கிளிநொச்சி- கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தனது வீட்டில் இவர் உயிர்மாய்ப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவரது சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள்...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது பொலிஸாரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர்...

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியின் போது உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியின் போது சிங்கக்கொடியினை ஏந்தியிருந்த பெண்கள் உட்பட...

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவ பேரணி தாக்கப்பட்டமைக்கு சிங்கள செயற்பாட்டாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோகம ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லஹிரு வீரசேகர தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். திலீபன் நினைவேந்தல் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் போது ஒரு குழுவினர் தடிகளால் தாக்கியுள்ளனர். பொலிஸார் எவ்வளவு அசமந்தமாக நடந்து கொண்டார்கள்...

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அவற்றில் கிரீமியா தன்னாட்சிக் குடியரசிலுள்ள 100 சொத்துக்களை விற்க திட்டமிட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, கிரீமியாவிலுள்ள, தேசிய மயமாக்கப்பட்டுள்ள சொத்துக்களை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக கிரிமியாவின் நாடாளுமன்ற சபாநாயகரான Vladimir Konstantinov தெரிவித்துள்ளார்....

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்திக்கு அருகாமையில் விமானப்படை மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்தி இன்றோடு 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள. இந்த குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் படுகொலை...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 09 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு –...

All posts loaded
No more posts