Ad Widget

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் எரிபொருளுக்கான முன்பதிவுகளை வழங்காததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன தேசிய எரிபொருள்...

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மா 96 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோதுமை...
Ad Widget

யாழில் பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது!! மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்

பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் வசந்தசேனன் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பாண் ஒரு இறாத்தல் 220 தொடக்கம் ரூபா 250 ரூபா வரை விற்பனை செய்தனர். எனினும் அப்போது யாழ்ப்பாணத்தில் பாண்...

மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் டக்ளஸ்!

யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்கள் இன்றைய தினம் பார்வையிட்டனர். 200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள வியாபார மத்திய நிலையத்தினை விவசாயிகளுக்கும் மக்களும் நன்மையளிக்கும்...

காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை!!

ஏழாலை பகுதியில் தனது காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் ஒருவர் கடந்த 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக காணொளி அழைப்பை காதலிக்கு ஏற்படுத்தி குறித்த இளைஞன் தனது உயிரை மாய்த்துக்...

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!!

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன்கிழமை சிரமதானம் பணிகள் இடமபெற்றன. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு!!

நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இவ்வாறு தெரிவித்தார். பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள்...

மழையுடனான காலநிலை நீடிக்கும்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என...

கூட்டு ஆலோசனையில் ரஷ்ய தளபதிகள்! உக்ரைனுக்கு காத்திருக்கும் பேரிடி

அண்மைக்காலமாக அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் உக்ரைன்-ரஷ்யா தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் ரஷ்ய தளபதிகள் உக்ரைனில் அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள்,உக்ரைனில் தொடர்ந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறன. இதனால் விரக்தியடைந்துள்ள ரஷ்ய தளபதிகள் எங்கே எப்போது...