Ad Widget

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நீடிப்பு- பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில்...

நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு !

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாணின்விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Ad Widget

சூரன்போரில் வாள் வெட்டு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது....

யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாம ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்தனர். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது. இதன்போது நீதி அமைச்சர்...

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பெற்றோர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுடிருந்தனர்.

சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது – கே.வி. தவராசா குற்றச்சாட்டு

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள்...

பாணின் விலை குறைகிறது!

பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச்...

தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ் இளைஞன்புதிய சாதனை

தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார். 120...

பல மாகாணங்களில் கனமழை பெய்யும்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...

முடங்கும் அபாயத்தில் வடக்கு வைத்தியசாலைகள்!!

வடக்கு மாகாண சுகாதாரத்திணைக்களத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் மேலதிக நேரக்கொடுப்பனவு பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆளணி இல்லாத நிலையில், பணியாளர்கள் மேலதிக நேரக்கடமைகளின் ஊடாகவே வைத்தியசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த நிலையில், மேலதிக நேரக்கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையால், வைத்தியசாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் நேரடியாக அசௌகரியங்களுக்கு...

ரஷ்யாவை விட்டு தப்பிச்சென்ற புடினின் வளர்ப்பு மகள்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வளர்ப்பு மகளாக பார்க்கப்படும் பிரபல மொடல் அழகி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள அவரது குடியிருப்பை பொலிஸார் சோதனை மேற்கொண்ட நிலையில், அதற்கு சில மணி நேரங்களுககு முன்னர் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்ய தொலைக்காட்சி நட்சத்திரமும் மொடலுமான 40 வயது Ksenia Sobchak விளாடிமிர் புடினுக்கு...