Ad Widget

சங்கானையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள்!

வீதியால் சென்ற முதியவர் ஒருவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , அந்த முதியவரை கத்தியினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு , முதியவரின் ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி சென்றுள்ளனர். சங்கானை பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) குறித்த சம்பவம்...

17 வயதுடைய மகனை திருத்து தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று (புதன்கிழமை) காலை ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக...
Ad Widget

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும்...

பேராசிரியர் சி. பத்மநாதனின் மூன்று ஆய்வு நூல்கள் வெளியீடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நூல்...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனிச்சாமிகுளம் பிரதேசத்தில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது கைது...

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு!

கோண்டாவிலில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியை நேற்றைய யாழ் மாநகர சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டாக நிராகரித்து. யாழ் மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளது....

வல்வெட்டித்துறையில் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்!

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேவமயில் முருகவேள் (வயது 65) எனும் முதியவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, நாவலடி , ஊரிக்காடு பகுதியில் உள்ள...

13 வயதுச் சிறுமி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். குறித்த நபருக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையே தவறான...

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு – 21 வயது யுவதி பலி

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த யுவதி சம்பவ...

யாழில் முச்சக்கரவண்டி சாரதியொருவரின் மோசமான செயல்!!

யாழ். நகர் சேவைத் தரிப்பிட அனுமதி அற்ற, வீதியால் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவரை மிரட்டி சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்திற்கு 2000 ரூபா கூலி கொடுக்குமாறு மிரட்டிப் பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் வைரவர் கோயிலடி அருகாமையில் நேற்று முற்பகல் இச் சம்பவம் பதிவாகியுள்ளது....

உக்ரைனை இருளில் மூழ்கடித்தது ரஷ்யா!!

அண்மையில் ரஷ்யா மேற்கொண்ட பாரிய தாக்குதலின் பின்னர் உக்ரைன் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 7 முதல் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் கொருன்ஜி கூறினார். உக்ரைனின் 30 வீத...