Ad Widget

நவாலி அட்டகிரி பகுதியில் 111 கைகுண்டுகள் மீட்பு!!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை...

சண்டிலிப்பாய் அபிவிருத்தி உத்தியோகஸ்தரிடம் வழிப்பறி!

சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வழிப்பறி கொள்ளையர்கள் வீதியில் மறித்து கத்தி முனையில் அவரிடம் கொள்ளையடித்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த பெண் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மாலை பிரதேச செயலக பணி முடித்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , வீதியில் நின்ற...
Ad Widget

வல்வெட்டித்துறையில் அமைச்சரை கடிக்க முற்பட்ட நாய் சுட்டுக்கொலை!!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே வடமராட்சிக்கு தனிப்பட்ட முறையில் முன்னெடுத்த பயணித்தின் போது அவரது பாதுகாவலரினால் நாய் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் தனது குடும்ப நண்பர் ஒருவரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு...

யாழ். நகரில் கட்டடப் பணியாளரின் சடலம் மீட்பு; கொலையா, விபத்தா?

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் உள்ள கட்டடத்தின் மேல்மாடியில் வெளிப்புறமாக தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர். பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என்று பொலிஸார் கூறினர். திருநெல்வேலியைச் சேர்ந்த 32 வயதுடைய கட்டடப் பணியாளரே...

வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கில் இருந்து ஆலயம் நிர்வாகம் விடுதலை!

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை ஆயர்படுத்துமாறு வவுனியா நீதவான் பொலிஸார் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம்...

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – கஜேந்திரன்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான முனைப்பைக் காண்பிக்காத நிலையில், இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகயை முன்னெடுக்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் பின்லாந்து வெளிவிவகார அமைச்சர் பெக்கா காவிஸ்தோவிடம் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான கட்டண அதிகரிப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 100 ரூபாயாக இருந்த புதிய...

தீவிரமடையும் போர் பதற்றம்! 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல்

தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8 மாதங்கள் கடந்த நிலையில் போர் தொடர்கின்றது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன்...