Ad Widget

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். செப்டம்பர் முதலாம் திகதி...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நாவலர் வீதியில் உள்ள (UNHCR) அலுவலகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் கிளிநொச்சி காணாமல்...
Ad Widget

புதுக்குடியிருப்பு நகரில் போராட்டத்துக்கு ஆதரவாக பூரண கடையடைப்பு!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30) தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர்...

செப்டம்பர் 7 வரை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும்...

போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக மீண்டும் அறிவிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 350 முதல் 400 பௌசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எரிபொருள் வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....

70 பேருக்கு கொவிட் தொற்று!! 5 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 1 ஆணும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 70 பேருக்கு கொவிட் தொற்று...

யாழில் போதைப் பொருளை நுகர்ந்த 2 பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்களை நேற்றிரவு (29) பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக, யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு...

இன்று முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு!

நாட்டில் இன்று(செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20...

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்- சுரேஷ்

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தெற்கு அரசியல்வாதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடுமையை இன்றளவிலும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர்....

இலங்கையில் 300 ரூபாவாக அதிகரிக்கும் பாணின் விலை!! யாழில் 15 நாட்களில் வெதுப்பகங்களை மூடும் நிலை!!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை...

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் – உக்ரைன் எச்சரிக்கை

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 185வது நாளை தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் ஜபோரிஜியாவிலும், உக்ரைனின் தெற்கு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாட்டின் விமானப் போக்குவரத்து தினத்தில் பேசிய உக்ரைனிய...