Ad Widget

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை இடையறாது விநியோகம் செய்வதற்கு போதியளவு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது. மக்கள் நினைப்பதனை விடவும்...

ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் ரஷ்யா – எரிவாயு விநியோகம் மேலும் குறைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக குறைப்பதாக ரஷ்ய எரிசக்தி நிறுவனமான Gazprom அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பிரதான குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை கடுமையாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. Nord Stream 1 குழாய் வழியில் மற்றொரு விசையாழியை நிறுத்துவதன் மூலம் நாளாந்தம் எரிவாயு உற்பத்தியை 20 வீதமாக குறைந்துள்ளது....
Ad Widget

பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்றுமுன்னர் தனது கடமைகயை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்றதன் பின்னர் பொரலுகொட பிரதேசத்தில் உள்ள தனது பெற்றோரின் நினைவுத்தூபிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவுள்ளார்.

வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால் பறிபோன உயிர்!

நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நயினாதீவு இறங்குதுறையில்...

நீண்ட விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாண...

மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை!

பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்....

யாழில்.பொது போக்குவரத்துக்கள் முடங்கின!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும்...

நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்!!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளது. இதன் காரணமாக நாடு...

ரணிலை எச்சரித்த ஜப்பான்!!

இன்னும் ஒரு தடவை இவ்வாறான ஒரு வன்முறை சம்பவம் நடைபெறுமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை டல்ஸிற்கு 82 வாக்குகளும் அனுரவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன, இதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவித்தார்.

தவறான சிகிச்சை முறையினால் 15வயது மாணவன் உயிரிழப்பு??

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 15 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடோன்றில் நேற்று உயிரிழந்தார்....

கூட்டமைப்பு – டலஸ், சஜித் இடையிலான எழுத்துமூல உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் இதோ !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துமூலமான உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கீழ்வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும், தாம் பதவிக்கு வந்து, மூன்று தொடக்கம் ஆறு மாத காலம் முடிவடைவதற்குள் குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி...

செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் இந்தப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில், நான்கு வாக்குகள் செல்லா வாக்குகளாக அளிக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாக்கை, பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

6 லீற்றர் பெற்றோலுக்காக பல்கலைக்கழக மாணவி செய்த காரியம்!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கி தனது மோட்டார் சைக்கிளுக்கு விட்டு உல்லாச சவாரி செய்துள்ளார். தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்த தினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை...

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம்!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய்...

முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படாது என அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை...

“எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ – பகிரங்க சவால் விடுத்தார் சுமந்திரன்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

டலஸை ஆதரிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாட்டைப் பெற்றது கூட்டமைப்பு

புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருமவுக்கு இன்றைதினம் ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அகழப்பெரும மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடமிருந்து எழுத்துமூலமான ஆவணம் பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருவை ஆதரிப்பதற்காக நிபந்தனைகளை விதித்து எழுத்துமூலமான ஆவணத்தினைப் பெற்றுக்கொண்டதா இல்லையா...
Loading posts...

All posts loaded

No more posts