Ad Widget

ஐக்கிய மக்கள் சக்தியினரின் யாழ் போராட்டத்தில் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை...

யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

வடக்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி யாழ். நகரில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் ஏழு நாட்களுக்குள் அநுராதபுரம் கடந்து தெற்கு வரை செல்லவுள்ளது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் மிரிஹான பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்பவற்றின் எதிரொலியாக...
Ad Widget

தற்போதைய பிரச்சினைக்கு எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை – அங்கஜன்

தற்போதைய பிரச்சினைக்கு எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வன்முறை இல்லாமல் போராட்டங்களை மேற்கொண்டே தீர்வை பெறலாம் எனவும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின்...

இன்றும் சில இடங்களில் பதற்றமான நிலைமை!!

இலங்கையில் இன்றும் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் , சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்ற மரவேலை செய்பவா்கள் மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளனது. அத்துடன் புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும்...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!! 2022 உயர்தரப் பரீட்சை ஓகஸட்டில்!!

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன...

நேற்றிரவு மிரிஹானவில் என்ன நடந்தது?

06 பொலிஸ் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. அந்த பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள் தற்போது வழமை போன்று தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு,...

யாழ். கொரோனா சிகிச்சை நிலைய மோசடி குறித்து விசாரணை செய்யுமாறு பிரதமர் பணிப்பு!

யாழ். கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று (வியாழக்கிழமை) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய்...

ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு?

இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,...

தமிழ் அரசியல்வாதிகள் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை – எஸ்.ஸ்ரீசற்குணராஜா

தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும்...

ஜனாதிபதி வீட்டின் முன்பாக போராட்டம் – கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!

நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2...