Ad Widget

12 இந்திய மீனவர்கள் விடுதலை!!

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். 12 இந்திய மீனவர்களும் B/202/2022 ,B/203/2022...

மின்வெட்டுக் காரணமாக கோவிட்- 19 தடுப்பூசிகளின் தரத்தில் பாதிப்பு ஏற்படும்!!

மின்வெட்டு கோவிட்-19 தடுப்பூசிகளின் தரத்தை பாதிக்கலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது; நிலவும் மின் நெருக்கடி காரணமாக நாடுமுழுவதும் தினமும் பல மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகங்களில் மின்பிறப்பாக்கி வசதிகள் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான அலுவலகங்களில்...
Ad Widget

வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைக்குமாறு ஆலோசனை!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி யோசனைகளை முன்வைத்துள்ளது. அதன்படி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல்...

பூநகரியில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாபலான கணேசரட்ணம் ஹரிகரன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார்....

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 977 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 645,037ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 20,128 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமரை சந்திக்க அவசியம் இல்லை ; ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம் – சுமந்திரன்

அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட பிரதமர் இணக்கம் தெரிவித்து காலம் ஒதுக்கிய போதும் அதனை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், பிரதமரை தாம் ஆர்ப்பாட்டம் செய்யும் வீதிக்கு வந்து கதைக்குமாறு தெரிவித்துள்ளனர். கூட்டமைப்பினர் நியாயமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள். என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார். பிரதமரை சந்திக்கவோ...

வடக்கு கிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கள் முன்னெடுக்கப்படுகின்றது – செல்வராஜா கஜேந்திரன்

தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வடக்குக், கிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,...

லீசிங் பணம் கட்டுவதற்காக வயோதிப் பெண்ணை கோடாரியால் அடித்துக் கொன்றேன்!!

“மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.”இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை (பெப்.22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள...

ஐந்து வருடத்தை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் !!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த...

இன்று 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேபோல ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்...

யாழில் வெவ்வேறு விபத்துச் சம்பவங்களில் இருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் தொடருந்துடன் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் ரயில் கடவையில் இன்று இந்தச் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை துவிச்சக்கர வண்டியை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது...

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை இல்லை – சுமந்திரன்

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து...

யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பெண் தனிமையில் இருந்த...

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

சுழற்சி முறையில் இன்றைய தினமும் (வியாழக்கிழமை) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. ஏனைய...

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்ய நடவடிக்கை!

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை(வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்.மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை அருகே மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகையை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.

எரிவாயு, அரிசி, சீனி, பால்மா, சீமெந்து தட்டுப்பாடு இருப்பது உண்மையே!! – அரசாங்கம்

அண்மைய நாட்களில் எரிவாயு, அரிசி, சீனி, பால்மா மற்றும் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார். எவ்வாறாயினும் தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே இருப்பதாகவும்...

அரசியல் கைதிகள் யாழ். சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம்!

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழில் இன்றும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை...

கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!

கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் வினியோகம் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிர்ப்தி வெளியிடுகின்றனர். பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க...
Loading posts...

All posts loaded

No more posts