- Tuesday
- March 19th, 2024
யாழில் வருடாந்திரம் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது , யாழ்.மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிதியில் 20 இலட்ச ரூபாயை ஏற்பாட்டாளர்கள் இதுவரை மாநகர சபைக்கு வழங்கவில்லை என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (புதன்கிழமை) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி...
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் நந்தரூபன்,...
வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இன்று (வியாழக்கிமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்....
கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வயதெல்லையின்றி நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் குருதியில் சீனியின் மட்டம் உயர்ந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கொவிட் தொற்று உறுதியான அனைவரும் குருதியின்...
வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண ஆளுநராக நான் கடமைகளை பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. எனக்கு...
தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தொடர்பாக பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...
இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்கள், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. கடந்த வருடத்தில் நாட்டில்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன. இந்தநிலையில் இதுகுறித்து இந்திய...
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக...