Ad Widget

இலங்கையில் ஆயிரத்தை கடந்த நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 1056 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

”கிட்டுபூங்கா பிரகடனம்” வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த பேரணியின் நிறைவிலேயே ”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
Ad Widget

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் – அலி சப்ரி

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள். கிடைக்காது...

பலாலி விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் – அரசாங்கம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் பலாலி விமான நிலையம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு...

ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது – சுமந்திரன்

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன்...

பூஸ்டர் செலுத்தியவர்கள் மாத்திரமே கச்ச தீவு செல்ல முடியும் – இந்தியர்களுக்கு அனுமதி இல்லை!

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கச்சதீவு தூய அந்தோனியார் ஆலயஅருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார். யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்து!

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது மாணவர்கள் மத்தியில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற...

நாட்டில் மிக வேகமாக பரவும் கொரோனா – மீண்டும் முடக்கப்படுகின்றது நாடு?

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவே முயற்சிப்பதாகவும், இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது...

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம் கொரோனா காரணமாக மூடப்பட்டது!

கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கு நேற்று (வியாழக்கிழமை ) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவு சீட்டு வீநிநோயகம், கடவுச் சீட்டு விண்ணப்பம் பெறுதல் என அனைத்து...

யாழில் ஜனவரி 31 முதல் பெப்ரவரி 5 வரை கோவிட்-19 தடுப்பூசி வாரமாகப் பிரகடனம்

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிவரை தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது (பூஸ்டர்) வழங்கப்பட உள்ளது. இத்தடுப்பூசியினை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து...

யாழ்.போதனா கொரோனா சிகிச்சை விடுதிகளை மீள திறப்பது தொடர்பில் ஆராய்வு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த கொரோனா சிகிச்சை விடுதிகளை மீளவும் இயக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று அபாயம் அதிகரிக்கும் நிலையில் எடுக்கப்படவேண்டிய முன் ஆயத்த நிலைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது. போதனா வைத்தியசாலையில் கொரோனா...

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார் அலி சப்ரி!

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (வியாழக்கிழமை )பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின் குமார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

எங்களைபற்றி விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன – சுகாஷ்

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில்...

கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் இலங்கையால் கட்டுப்படுத்த முடியும் -சுகாதார அமைச்சு

இலங்கைக்குள் நுழையும் கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சில தரப்பினரின் தவறான கருத்துகள் இருந்தபோதிலும் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இருப்பதாக சுட்டிக்காட்டினார். போதிய படுக்கைகள் மற்றும் ஒட்சிசன் இருப்புகள்...

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா!

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட...

நாள் ஒன்றுக்கு 2,000 தொற்றாளர்கள்??? வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன!!

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வார்டுகள் தற்போது மற்ற நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் கொள்ளளவை தாண்டிச் செல்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், 25ம் திகதி 40 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர். தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்களில் மேற்படி எண்ணிக்கையான தொற்றாளர்கள்...

இயற்கை உரத்தினை பயன்படுத்தி இராணுவத்தினால் செய்யப்பட்ட வயல் அறுவடை விழா

ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று 26.01.2022 சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடல் கரையினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 591 ஆவது படைப்பரிவின் தலைமையக முகாமின் பின்...
Loading posts...

All posts loaded

No more posts