Ad Widget

நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!!

கொவிட்-19 மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட மீனவர்களுக்கு சீன தூதுவர் வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்!

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான...
Ad Widget

நவாலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. குறிந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தியுள்ளது. இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து...

நல்லூர் ஆலயத்தில் சீனத் தூதுவர் வழிபாடு!!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்து அவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்தனர். கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் சீன அதிகாரிகள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

டிசம்பர் மாத இறுதி வரைக்கான சுகாதார வழிகாட்டி!!

கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போது நடைமுறையில்...

கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை ஏன் எடுக்க வேண்டும்?

ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாடு நாட்டில் பரவினால், அதன் விளைவுகளை குறைக்க கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வது அவசியமாகும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வதன் மூலம், கோவிட்-19 நோய்த்தொற்றின் இறப்பு மற்றும் சிக்கல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...

யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – கீ சென் ஹொங்

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “”முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய...

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது- கஜேந்திரகுமார்

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், யாழ்.மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய அமைப்பு இந்த பாதீட்டை எதிர்க்கும்...