Ad Widget

கொட்டும் மழையிலும் இந்திய மீனவர்களுக்கெதிராக போராட்டம்!!

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு...

நீண்ட வார இறுதி நாட்களைக்கொண்ட 2022ஆம் ஆண்டு!

நாட்காட்டியின்படி 2022ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக காணப்படுகிறது. அதன்படி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன. ஜனவரி, ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் பௌர்ணமி போயா விடுமுறைகள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் தைப் பொங்கல், சுதந்திர தினம் மற்றும் தீபாவளி என்பன வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் வந்துள்ளன. சிங்களப்...
Ad Widget

இலங்கையில் மேலும் 41 பேருக்கு ஒமிக்ரோன்!

இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவுக்கு மாற்றம்

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 2022 ஜனவரி 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்....

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமாம்!

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். சந்தைக்கான எரிவாயு விநியோகம் மற்றும் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இந்தநிலையில் நேற்று மாலை வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட...

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு யாழில் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது...

மாங்குளம் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்!!

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே எதிர்வரும்...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய...

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் வயோதிப பெண் கொலை!!

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஓட்டுத் துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ஒரு சோடி...

போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையிலிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த இருவருடமும் சாவகச்சோி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு பேராசிரியர் பதவி!!

பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் உளநலப் பேராசியராகவும், திறமை அடிப்படையிலான உள்ளகப் பதவியுயர்வுக்காக விண்ணப்பித்திருந்த இரசாயனவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசலிங்கம் சசிகேஸ் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி வழங்கப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த...

சீனாவுடன் மேற்கொண்ட நாணய மாற்று ஒப்பந்தமே அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வுக்கு காரணம்!!

சீனாவுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை சுமார் 3.1 பில்லியன் டொலர்களாக உயர்த்த உதவியுள்ளது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் 1.5 பில்லியன் டொலர் நாணய பரிமாற்றம் இறுதி செய்யப்பட்ட பின்னர் கையிருப்பு அதிகரிக்கப்பட்டது என ஏஜென்சியை மேற்கோளிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாணய...

வடமாகாணத்திலுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

வடக்கு மாகாணத்தில் இயங்கும் ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஊழியர்கள் தினவரவுப் பதிவில் கையொப்பமிடும் வசதியை ஏற்படுத்துவதுடன் மாதாந்த சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும். இவ்வாறு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் தனியார் துறையில் கடமையாற்றும் ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு சுமைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ...

விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளது. யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை...

50 சதவீத மாணவர்களுடன் இன்று முதல் பல்கலைகள் செயற்பட அனுமதி

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து துரித தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கொவிட்...

நாடு முழுவதுமான பாடசாலைகள் ஜனவரி 3 மீண்டும் திறப்பு

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந் நிலையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை...

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளரான...
Loading posts...

All posts loaded

No more posts