- Tuesday
- March 19th, 2024
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கோவிட்- 19 தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின்...
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா பரவல் நடவடிக்கை காரணமாக காணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகிலிருந்த...
கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டமைக்கு நன்றியாக மாசற்ற சுவாசத்திற்காக மரங்களை நாட்டுவோம் என வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு மக்களை வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனாத் தொற்றுத் தொடர்பாக தமிழில் விழிப்புணர்வினை ஏற்படுத்திய அனைத்து சமூக ஊடகங்களுக்கும் நன்றிகள். உலக அளவில் பரவிய இப்பாரிய தொற்றின்போது...
வடமராட்சி பகுதியில் காரில் வந்த கொள்ளை கும்பலொன்று, ஒரு மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி- வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வல்லை பகுதியில் வெள்ளை நிற காரில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள்,...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு பிள்ளையின் இளம் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி காலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 22 அகவையுடைய ஒரு பிள்ளையின் தாயே...
கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளும் போடப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் கொடுக்க முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
எரிவாயு, பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பனவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். அவர் வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது. இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்...