Ad Widget

யாழ் இளைஞனின் விசித்திர செயல்! – பொலிஸார் விசாரணை!

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசித்திரமான முறையில் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் நேற்று (26) பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் பிரபலமான பிறேம் (ஜோய்) என்ற இளைஞனே இவ்வாறு தனது நாக்கினை இரண்டாக...

நாடு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும்!!

நாடு முறையான முறையில் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். “கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளும் கணிசமாகக் குறைந்துள்ளனர். தொற்றாளர்களி்ன் எண்ணிக்கை மற்றும்...
Ad Widget

வாளுடன் நின்று டிக் டொக்கில் வீடியோ செய்து வெளியிட்ட சங்கானை இளைஞன் கைது

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் சுன்னாகம்...

பிறக்கும் குழந்தைக்கு தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்குமாறு கோரிக்கை!!

பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைக்கும் தேசிய அடையாள அட்டை எண் வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. சிறுவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு அடையாள அட்டை எண் இல்லாதது குறித்து கவனத்தை செலுத்தப்பட்டது. பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைக்கும்...

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு அரசதலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் வரலாற்று ரீதியான வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது என்று...

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள்- கெஹெலிய ரம்புக்வெல

எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தடுப்பூசி பெற பலர் வருகிறார்கள். ஆனால் சிலர் அதை புறக்கணிப்பதாகவும் எதிர்காலத்தில் தடுப்பூசியை மறுபரிசீலனை செய்வதன் அவசியம் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வில்...

நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளினால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....