- Tuesday
- March 19th, 2024
18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகப் போராளி ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 26) இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இந்த நிலையில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவரான ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸூக்கு முகநூலில்...
மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் சிறிது நேரம் பதற்றநிலை காணப்பட்டதோடு, பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத்...
யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி (வயது -33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இதேநேரம், கைதடி அரச...
தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத செல்வாக்குமிக்க தலைவர் வி.தர்மலிங்கத்தின் 36வது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் மறைந்த அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தூபிக்கு சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது....
அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வயலில்...
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று 103 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....