Ad Widget

அரச செலவுகளை கட்டுப்படுத்தவும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புக்களை நிறுத்தவும் முடிவு

அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரச செலவுகளை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். தடுப்பூசி, சுகாதாரத் துறையில் கூடுதல் செலவுகள் மற்றும் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதன் காரணமாக இந்த ஆண்டிற்கான தொடர்ச்சியான செலவு மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கலாம் என்று அமைச்சர் அமைச்சரவைக்கு...

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: சர்வதேச விசாரணைகள் ஊடாகவே நீதியை பெற முடியும்- சிவாஜிலிங்கம்

சர்வதேச விசாரணைகள் ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகள் ஊடாக, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெறுவதற்கு அனைவரும் முனைப்பு காட்ட வேண்டுமென சிவாஜிலிங்கம்...
Ad Widget

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை), அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு கூறியுள்ளார். காணாமற்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் முக்கிய பணி, அவர்கள் எப்படி காணாமல் போனவர்கள் என்பதை கண்டறிவதே. அதுதான் சட்டம்...

கொரோனா நோயாளிகளினால் நிரம்பியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலைகளிலும் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை,...

யாழில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு!!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், தற்போதைய கொரோனா இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக தியாகி அறக்கொடை...

இலங்கையில் கொரோனா இறப்பு வீதம் மிக அதிகம்!

அரசாங்கம் தினசரி வெளியிடும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று ஊடக சந்திப்பின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன, இலங்கையின் தினசரி கொரோனா வைரஸ் மரணங்கள், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முப்பது மடங்கு அதிகம்...

குருநகர் இளைஞன் கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்!

குருநகர் இளைஞன் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்....

பொதுமக்கள் தமது பிரதேசங்களிலேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்!

பொதுமக்கள் தங்கள் சொந்த கிராம அலுவலகர் பிரிவு அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இருந்து மட்டுமே கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார். ஒவ்வொரு பகுதிக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் கொடுக்கப்படுவதால், தடுப்பூசியை தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பல தடுப்பூசி மையங்களில்...

30 தொடக்கம் 40 வீதமான கொவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் 30-40வீதமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. முடிந்தளவு பொதுமக்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவதே இப்போது இருக்கும் ஒரே வழிமுறையாகும். ஆகவே குறைந்தது 21 நாட்களேனும் அவர்களைவீடுகளில் தனிமைப்படுத்தியத்தினால் நிலைமைகளை வெகுவாக குறைக்க முடியும் எனபொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் ஐவர் உயிரிழப்பு!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69 வயது) பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த (76 வயது) ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மந்திகை ஆதார...

யாழில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அலகை வழங்கும் பணி முன்னெடுப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின் முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள், கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த முதலாவது அலகு...

இடம்பெயர்ந்து மீளக்குடியமராதோர் பதிவு செய்ய வேண்டுகோள்!

யாழ். மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம்,...

கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. 103 ஆண்களும் 109 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகத்...

அகதிகள் முகாம் அல்ல: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அங்கு...

யாழில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண் (22 வயது) உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனால் குறித்த பெண்ணை, மந்திகை...

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை!

மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக 2003ஆம் ஆண்டு...

18ஆம் திகதி வரை ஊரடங்கை நீடித்தால் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் – WHO

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் பேரை பாதுகாக்க முடியும் எனவும்...

யாழ்.பல்கலையில் நால்வருக்கு பேராசிரியர்களாக பதவி உயர்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள்...

காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே...

யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் – யாழ்ப்பாணம் பொலிசார் பாராட்டு!

கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மிகவும் சரியான முறையில் பின்பற்றுவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள்முதல் இதுவரையில் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடி காணப்படுவதாக பொலிஸார்...
Loading posts...

All posts loaded

No more posts