Ad Widget

மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி...

அனைத்து அரச ஊழியர்களையும் ஓகஸ்ட் 2 முதல் கடமைக்கு அழைக்க ஜனாதிபதியின் செயலர் அறிவுறுத்தல்

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கும் வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கும் அனுமதியளித்து வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் இரத்து செய்து அனைத்து ஊழியர்களையும் வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கடமைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு ஜனாதிபதியின் செயலாளர் ஜயசுந்தர, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். கோவிட்-19...
Ad Widget

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இளைஞர் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வீதியால் சென்ற தன்னை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தான் வீதியால் சென்று கொண்டிருந்த போது மது போதையில் ஹயஸ் ரக வாகனத்தில்...

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கண்ணதாசன் விடுதலை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்களில் ஒருவரான...

தங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை தலைமையில், யாழ்ப்பாண அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணாமல்...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த (79 வயது) பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த (80 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த (44 வயது) ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார். இதன்படி...

புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

புங்குடுதீவில் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டோர் விபரம்!!

வட மாகாணத்தில் சினோபாம் 1வது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (29) வியாழக்கிழமையும் இடம்பெற்றன. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில் 18,039 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,110 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7,865 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 9,377 பேருக்கும் ஆக வட மாகாணத்தில் மொத்தமாக 40,391 தடுப்பூசிகள்...

யாழில் வழிபாட்டுத் தலங்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் கட்டாயமாக பின்பற்றவேண்டிய சுகாதார விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாய நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக வழிபாட்டு தலங்கள், திருமண மற்றும் ஏனைய வைபவங்களின்போது கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வழிபாட்டு தலங்களுக்கான கோவிட் -19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்...

கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளமை சிறிய விடயமல்லவென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்காவிடின், மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கடந்த புதன்கிழமையுடன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருந்தது. இந்நிலையில் நேற்று...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 66 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து...