Ad Widget

அமில மழை பெய்வதற்கான சாத்தியம் – மக்களுக்கு எச்சரிக்கை!

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வெளியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த வர்த்தமானி வெளியாகியுளள்து. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
Ad Widget

கிராம அலுவலகரும் மனைவியும் யானை தாக்கியே உயிரிழப்பு – இறப்பு விசாரணையில் தெரிவிப்பு

பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது துணைவியும் யானை தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர் என்று இறப்பு விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது-52) மற்றும் அவரது மனைவி...

யாழ் இராணுவ கட்டளைத் தளபதி யாழ் மக்களிடம் வேண்டுகோள்!

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற...

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவிபிரமாணம்

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார். பதவிப்பிரமாணத்தின் போது ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தார்.

இறுதி சடங்கில் பங்கேற்ற பூசகர் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதன் பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் வங்கியாளரின் தந்தை...

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்தும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...

சீரற்ற காலநிலையால் யாழில் 46 குடும்பங்கள் பாதிப்பு – குழந்தை காயம்

யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது...

யாழில் ட்ரோன் கண்காணிப்பின் அடிப்படையில் 10 பேர் கைது!

யாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் இன்று காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை...

திடீர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். சிறுவனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலுடன் கடும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது....

பல்கலை. அனுமதி விண்ணப்பகாரர்களுக்கு பாடசாலை வழங்கும் எந்த ஆவணமும் தேவையில்லை!!

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மட்ட விண்ணப்பகாரர்கள் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. அவர் மேலும் தெரிவித்ததாவது; பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் பாடசாலை விடுகைச் சான்றிதழ், அதிபர்களின் சான்றிதழ் கடிதம் மற்றும் பரீட்சை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை மாணவர்கள் பெற...

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு மேலும் சில நாட்களுக்கு நீடிப்பு!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்களுக்கு 3 நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்....

25ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை நீக்காமல் தொடர்ச்சியாக 14 நாள்கள் விதிக்கவேண்டும்!!

அடுத்த செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ வல்லுநர் லக்குமார பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார். நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள நிலையில் சிறப்பு மருத்துவ...

மணல் கடத்தல் கும்பலின் ஹன்டர் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் சிக்கினார்!!

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். தப்பித்தவர்களை கைது...

கொரோனா தொற்றாளர் வீதியில் செல்பவர்களை அழைத்து உரையாடுவதாக மக்கள் விசனம்!

சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லுகின்றவர்களை மறித்து உரையாடுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறு குறித்த நபர், ஏனையவர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் அவ்வீதி வழியாக செல்பவர்கள் அச்சம் கொண்டு, வேறு வீதிகள் ஊடாக பயணிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...

பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிகின்றது!!

பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து...

அந்தமான் கடல் பிராந்தியத்தில் சூறாவளி!

அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் நேற்று (20) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இந்தக் கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் அல்லது கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை...

பலாலி வடக்கு கிராம அலுவலகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி வடக்கு உள்பட்ட மூன்று மாவட்டங்களில் 7 கிராம அலுவலகர் பிரிவுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலி. வடக்கு பலாலி வடக்கு கிராம அலுவலகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுகிறது. அந்தக் கிராமத்தில் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு...

வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கோரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை (மே 20) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 272 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு...

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரு வாரங்களேனும் நாட்டை முடக்க நேரிடும் – மக்களை பொறுப்புடன் செயற்படுமாறு வலியுறுத்தும் அரசாங்கம்

புதிய வைரஸ் காரணமாக பாதிப்புக்கள் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் நாட்டு மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை விசேட வைத்திய நிபுணர் என்ற வகையில் தெரிவிக்க விரும்புகின்றேன். அவ்வாறு செய்தால் வைரஸ் பரவலை எம்மால்...
Loading posts...

All posts loaded

No more posts