Ad Widget

சவுதி அரேபிய கடற்பரப்பில் தாழ் அமுக்கம் – இலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை!

சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்தத் தாக்கம் தீவிரம் பெற்று இலங்கையின் வடபகுதியைக் கடக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாளை முதல் இந்தத் தாழமுக்கம் மேலும் தீவிரமடையலாம் என்றும் தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடமேல்...

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன- மாகாண சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள புதிய விடுதிகள், அதி தீவிர சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை, ஒட்சிசன் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்குவதற்கும் கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும்போது விசேட சிகிச்சை வழங்குவதற்கும் தயார்படுத்தப்பட்டுள்ளன....
Ad Widget

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!

இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்....

நாட்டில் அமுல்படுத்தப்படும் பயணத்தடை, நடமாட்டத்திற்கான தடைகள் குறித்து தெரிந்துகொள்க!

நாட்டில் தற்போதுள்ள கொவிட்-19 பரவல் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளும், நேற்று புதன்கிழமை முதல் மே 31 ஆம் திகதி வரை இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி...

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து யாழில் தங்கியிருந்த இந்திய குடும்பஸ்தினர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிப பெண், அவரது பிள்ளையும் மற்றும் அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகிய நால்வரும் படகு மூலம் நாட்டுக்குள் நுழைந்து குருநகர் பகுதியில்...

வவுனியா வளாகத்துக்குள் கொரோனா: 31 மாணவர்களுக்குத் தொற்று!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றுவரும் 31 மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) சுகாதாரப் பிரிவினரால் அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகளின்படி, அங்கு தங்கியுள்ள 31 மாணவர்ககுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்க்ள அனைவரும் தென்பகுதியைச்...

யாழ். நகரைச் சுற்றிவளைத்த பொலிஸார்: 50 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நெருக்கடி நிலையில், முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளி பேணாதவர்களைக் கைதுசெய்து...

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா: யாழில் 67 பேர் உட்பட 82 பேருக்குத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 977 பேரின் மாதிரிகள் நேற்று (புதன்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில்...

முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்த நினைவேந்தல் தூபி உடைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் , நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பொது நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு...

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு பயணிப்போரை வேறு பாதையொன்றினை பயன்படுத்துமாறு இராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று...