Ad Widget

இலங்கை முடக்கப்படாது – மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை!!

முழு நாட்டையும் முடக்குவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தார். எனினும், அடுத்துவரும் நாட்களில் மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அத்தியாவசிய...

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிப்பு

ஏப்ரல் முதலாம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் வரையான காலப்பகுதிக்கு காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் திகதியில் இருந்து மேலும் 6 மாதங்களுக்கு குறித்த சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Ad Widget

நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுகாதாரத் தொண்டர்கள் யாழில் போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றையதினம் (திங்கட்கிழமை) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்த காலத்தில் சேவையாற்றிய 840 பேரை சுகாதாரத் தொண்டர்களாக வடக்கு மாகாண சபையினால் உள்வாங்கப்பட்டனர் என்றும்...

கொரோனா தொற்று : மேலதிக நடவடிக்கை குறித்து இன்று அமைச்சரவையில் முடிவு !!

நாட்டின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது சுகாதார அதிகாரிகள் உட்பட சகல துறையினரும் முன்வைக்கும் திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என அரசியல் வட்டார தகவல்கள்...

கோவிட் வைரஸை செயற்கையாகவே உருவாக்கி அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதா??

2015 ஆம் ஆண்டு கோவிட் உயிரி ஆயுதத்தை உருவாக்கம் செய்ய சீனா திட்டமிட்டிருந்தமை தொடர்பான சீன ராணுவ ஆவணங்கள் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரிலிருந்து கோவிட் வைரஸ் முதல்முறையாக பரவி உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த வைரஸ் வுகானில் உள்ள பரிசோதனை கூடத்திலிருந்து தெரியாமல் வெளியேறியிருக்கலாம் என்றும் இவை...

முள்ளிவாய்க்கால் மண்ணில் எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் – இராணுவத்தளபதி

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச...

அரச நிறுவன ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை முழுமையாகவோ 75 சதவீதமோ மூடும் நிலை ஏற்படலாம்- பசில் ராஜபக்ச

நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று நிலமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75 சதவீதம் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டனர். எதிர்காலத்தில் நாட்டில்...

இலங்கையில் கொரோனா உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 2,500ஐ கடந்தது!

நாட்டில் நேற்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

வடக்கில் மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 21 பேருக்குக் கொரோனா- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளாார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாவட்ட...

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு- யாழ். மாநகர முதல்வரின் முயற்சி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் இந்த அமைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்வது இந்த அமைப்பின் நோக்கமாகும்....

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம் ஆகியவை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது....

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 800ஐக் கடந்து 801ஆக அதிகரித்துள்ளது.