Ad Widget

7ஆம் திகதிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை!!

வரும் ஜூன் 7ஆம் திகதிக்குப் பின்னரும் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மருத்துவர்கள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினருடன் தினசரி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி செயலணியில் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி,...

நல்லூர் – அரசடியிலிருந்து வெளியேறிய ஐவரை விளக்கமறியலில் வைத்தது யாழ்ப்பாணம் நீதிமன்றம்!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தைச் சேர்ந்த ஐந்து பேர் யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4...
Ad Widget

யாழ். பல்கலை. ஆளணிக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச சிறப்பு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை, 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழக ஆளணியருக்கு சினோபாம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு...

தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்றும் இடம்பெற்று...

அடுத்த கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முதல் கட்ட தடுப்பூசியை விரைவுப்படுத்த வேண்டும்- அங்கஜன்

யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முதல் கட்ட தடுப்பூசியை விரைவாக மக்களுக்கு செலுத்தினால்தான் அடுத்த கட்ட தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை...

அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை!

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய நிறுவனங்களால் இணையத்தளம் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தக் காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ள அதேவேளை, அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின்...

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். மேலும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய...

வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு...

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வதியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி ஞாயிறன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமரின் இணைப்புச் செயலாளர், கீதநாதன் காசிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் கிராம அலுவலக பிரிவு ரீதியில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்....

பயணத்தடையை தளர்த்துவதில் பயனில்லை – ஜனாதிபதி

கடந்த 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில் பொதுமக்கள் செயற்பட்ட விதம் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளித்ததைப் போன்றதாகும். நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் இதன்மூலம் தோல்வி அடைய கூடுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் நீடிப்பதற்கு ஜனாதிபதி...

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கவேண்டும் – விக்னேஸ்வரன்

வடக்கு – கிழக்கு மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்று ஆபத்திலிருந்து விடுபட இந்திய அரசு தடுப்பூசி மருத்துகளை வழங்கவேண்டும் என்று அந்த நாட்டின் யாழ்ப்பாணம் துணைத் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் இந்திய துணைத் தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்...

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப் படையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடை காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோரை கைது செய்வதற்காக, ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையினை ஏனைய பகுதிகளில்...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik-V) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik-V) கொவிட் 19  தடுப்பூசிகள் நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. 50,000 டோஸ் தடுப்பூசிகள் விசேட விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. முதல் தொகுதி ​15,000 டோஸ் கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 13.5 மில்லியன்...

வடக்கில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தடைப்பட்டதற்கான காரணம் வெளியானது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்கி வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொரோனா தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம்...

பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது எனவும் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை தொடரும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார். அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை...

நல்லூர் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் J/103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளது. நல்லூர்...

கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – அமைச்சர் தேவானந்தா

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு...

பயணத்தடை அமுலிலுள்ள போது, யாழில் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு!

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து...

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 15 பேருக்கு கொரோனா!

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 37 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று வியாழக்கிழமை ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாள்களில் தொற்றாளர்கள் அடையாளம்...
Loading posts...

All posts loaded

No more posts