Ad Widget

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

கொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, மேல் மாகாணம், வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில், தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில், தகர கொட்டகை முகாம் ஒன்றினையும் அமைத்துள்ள இராணுவத்தினர் முகக்கவசத்தை உரியமுறையில் அணியாதவர்களை எச்சரித்து, உரிய முறையில் அணியுமாறும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறும் மக்களை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல்...
Ad Widget

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழில் நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா வைரஸ்...

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்றும் காணப்படுகிறது!!

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் நிலமை ஒன்று காணப்படுவதாக விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை போன்று இந்த வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட்டுவாகலில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞன் சாவு!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.40 மணியளிவில் இடம்பெற்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் திஷாந்த் (வயது-19) என்ற இளைஞன் சம்பவ...

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும்...

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் மூன்று உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அவிசாவளை, கந்தான மற்றும் கல்பாத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 92 வயதுடைய ஆணொருவரும் 70 வயதுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 647ஆக அதிகரித்துள்ளது....

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கொரோனா...