Ad Widget

சுமந்திரன் மற்றும் சிறிதரன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விஜயம் செய்தனர். வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை விஜயம் செய்த அவர்கள் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். மேலும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா உள்ளிட்ட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதுடன், நிலவும் ஆளணி...

சைக்கிளில் பயணித்த சகோதர சிறுவர்களை மோதிய வடி வாகனம்: ஒருவர் சாவு; மற்றையவர் படுகாயம்

சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கோரோனா தொற்று; 21 பேர் திருநெல்வேலி கடைகளைச் சேர்ந்தோர்

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது...

புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது, மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனையடுத்து படுகாயங்களுக்கு உள்ளான குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில்...