Ad Widget

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து இன்றும் (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக...

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடலை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிராக மகஜர் கையளிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற மன்னார் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து குறித்த மகஜரை கையளித்தனர். கொவிட்...
Ad Widget

இரணைதீவுக்குச் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு- மக்கள் மத்தியில் அமைதியின்மை!

இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மெசிடோ...

வடக்கில் இரண்டு மாதங்களில் 841 பேருக்கு கோரோனா தொற்று!!

வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 128 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில்...

வடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கில் மேலும் 9 பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 292 பேரின் மாதிரிகள் பரிசோதனையிலேயே 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர், நவாலியில் கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புடையவர்கள் என்றும் மூவர்...

9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கைதான தாய்க்கு மனநிலை பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கை சமர்ப்பிக்கவும் குழந்தையின் உடல்நிலை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக...

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – டக்ளஸ்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்!

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம்...