Ad Widget

யாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு!

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினூடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. உறுப்பு...

20 ரூபா நாணய குற்றி புழக்கத்துக்கு வருகிறது!!

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்...
Ad Widget

மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன்- காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ரிஐடியிடம் தெரிவிப்பு

“எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்” இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர்...

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்!!

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று தொற்றுநோயியல் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். “முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும்....

வயோதிபப் பெண்ணை தாக்கி கொள்ளை; சந்தேக நபர்கள் இருவர் வேலணையில் சிக்கினர்

ஊர்காவற்றுறை சரவணையில் பட்டப்பகலில் வீடு புகுந்து வயோதிப் பெண்ணைத் தாக்கி தங்க நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, மானிப்பாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிட்ட நகைகள் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், அலைபேசி ஒன்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 955 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது 955 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மாவட்டத்தில் இதுவரை 232 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தொற்று உறுதியானோரில் 190 பேர் இதுவரை குணமடைந்து வீடு...

வடக்கில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 431 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 7 பேருக்கு தொற்று...

வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி...

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி...