Ad Widget

தரம் குறைந்த சனிடைசர்களின் விற்பனை அதிகரிப்பு!!

எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். கை சுத்திகரிப்பு மருந்துகள் உள்ளிட்ட தொற்று நீக்கிகளை (சனிடைசர்கள்) உற்பத்திகளை மேற்கொள்வதற்காகவும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பெரிய அளவிலான எதனோல் சந்தைக்கு...

கோவிட் -19 நோய்க்கான ஆயுர்வேத பானத்தை வாங்க மக்கள் அலை மோதல்

கோவிட் – 19 நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று கூறி ஆயுர்வேத வைத்தியர் தம்மிகா பண்டாரவினால் வழங்கப்படும் ஆயுர்வேத பானத்தை (டொனிக்) வாங்குவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். கேகாலையில் உள்ள ஆயுர்வேத வைத்தியரின் வீட்டிற்கு அருகே ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆயுர்வேத வைத்திய பானத்தை அண்மையில் சுகாதார அமைச்சர்,...
Ad Widget

கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது – இரா. சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும்...

2021ஆம் ஆண்டில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் – சுதத் சமரவீர

2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது கணிசமாக...

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கு மக்களை பயன்படுத்த வேண்டாம் – செல்வராசா கஜேந்திரன்

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சபையில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கோரிக்கையினை விடுத்தார். வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பாக முடிவுகளை...

இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்தை மன்னாரில் திறந்து வைத்தார் பிரதமர்!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம், நாட்டின் மின்...

வடமாகாண வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் புதிதாக நியமனம்

வடக்கு மாகாண சபைக்கு உள்பட்ட வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 27 மருத்துவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 மருத்துவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா...

யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படம் வெளியீடு!

ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச்...

தவிசாளரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம்- பிணை விண்ணப்ப பரிசீலனை ஒத்திவைப்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, பிணை விண்ணப்பத்தை நாளை புதன்கிழமை நீதிமன்றம் பரிசீலனைக்கு ஒத்திவைத்ததுடன் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோயில் வீதியைச் சீரமைக்கும்...

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும்!!

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

இலங்கையில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!!

நாட்டில் தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு மரணமும்...

கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு மீனவர்கள் – படகுப் பயணங்கள் நிறுத்தம்

புரெவி புயலின் தாக்கத்தை அடுத்து நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. 112 மீனவ குடும்பங்களின் படகுகள், இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து அசாதாரண சூழ்நிலையால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடரும் மழை, காரணமாக கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும்...