Ad Widget

நாடுமுழுவதும் விழாக்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை!!

நாட்டில் மறுஅறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் இந்த பணிப்பை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் எடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின்...

ஆவா வினோதனின் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!!

ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள போருள்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச்...
Ad Widget

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டது கொரோணா இரண்டாம்...

நாட்டில் இன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி,...

யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தல்!!

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் நேற்றையதினம் (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று மாலை (06)...

புங்குடுதீவு- குறிகட்டுவான் ஊடான தீவுப்பகுதிக்கான படகு சேவைகள் நிறுத்தம்!!

புங்குடுதீவு - குறிகட்டுவான் ஊடாக தீவு பகுதிகளுக்கான படகு சேவைகள் இன்று தொடக்கம் முற்றாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புங்குடுதீவு ஊடான பொது போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் வீடு திரும்பிய நிலையில் அவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன....

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பயணித்தோர் தயவு செய்து அடையளப்படுத்துங்கள்.. மீண்டும் பணிப்பாளர் கோரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பெண் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரையில் பயணித்த இ.போ.ச பேருந்தில் பயணித்த ஒரு சிலரே தம்மை அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில் ஏனையவர்களும் தம்மை அடையாளப்படுத்துமாறு மாகண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கேட்டுள்ளதாவது, புத்தளத்திலிருந்து - கொடிகாமம் வந்து பின்னர் பருத்துறைக்கு...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் அனைத்தும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது ; அரசாங்கம் மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள் !

இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம் (07) வெளியாகவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின்...

வடமராட்சி மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர அறிவித்தல்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50பேர் வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222...

பருத்தித்துறை பஸ்ஸுலும் கோரோனா பாதித்த பெண் பயணம்; சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தலில்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்தவர்கள் சமூகப்பொறுப்புடன் தம்மையும் சமூகத்தையும்...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் – குறித்த பகுதிக்கு பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வவுனியா ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்து...

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் தொடர்பை பேணிய மேலும்...