புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது. நூற்றாண்டு விழா மலரும் அன்றய தினம் வெளியிடப்படுகிறது. அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் நூற்றாண்டுவிழாக்குழுவினரும் பாடசாலை சமூகமும் கேட்டுக்கொண்டுள்ளனர். மாலை பாடகர் சாந்தனின் இசைக்கச்சேரியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை நிறுவனரான வே.விசுவலிங்கம் அவர்களின் சிலை அவரது பேரனார் நமசிவாயம் பிரேமகுமார் அவர்களினால் நிறுவப்பட்டு கையளிக்கப்படுகிறது. அதேவேளை காணிகளை குணபாலசிங்கம் மற்றும் இராசேந்திரன் குடும்பத்தினர் வழங்கியிருக்கின்றனர். அதைவிட நிறைய பழையமாணவர்கள் நிறைய பண மற்றும் சரீர உதவிகளை வழங்கியிருக்கின்றனர். எல்லோருடைய ஒத்துழைப்புடனும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.