Ad Widget

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிக்கான நடைபயணம் ஆரம்பம்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் ஆரம்பமாகியுள்ளது.

22-08-2016-2

இந்த நீதிக்கான நடை பயணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான தம்பிராஜா குருகுலராஜா, சுப்பரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நல்லிணக்கத்தின் அடையாளமா அத்துமீறிய புத்தர்சிலை, வெலிக்கடை, மகசின், பூஸா, தமிழ் இளைஞர்களின் குத்தகை வீடா? உள்ளிட்ட வாசகங்களை நீதிக்கான நடை பயணத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22-08-2016-1

Related Posts