2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி அறிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடாத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசெம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 2021 ஜனவரி 4ஆம் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.