- Friday
- April 19th, 2024
மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம்...
புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...
நாடாளுமன்ற அமர்வில் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரினால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் ..... ஆட்சிமாற்றம் ஒன்றின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நாம் ஆதரவளிப்போம். இதேவேளை...
எதிர்வரும் ஜூலை மாதம் முதல், மின்சார கட்டண அறவீட்டு முறையில் மாற்றம் செய்யப்படும் என மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வியாழக்கிழமை(22) இதனை தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து தனியார் பஸ்கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ் கட்டணங்கள் 7 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன்பிரகாரம் ஆரம்பக்கட்டணம் 8ரூபாவாகும்
சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்தாக கூறப்படும் நோர்தன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், தெரிவித்தார். அமைச்சருடன் கொழும்பில் மேற்கொண்ட சந்திப்பில் அமைச்சர் இந்த...
எரிபொருள் விலை குறைப்பின் பின்னர், கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால், அது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மின்வலும் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கம் - 0115 243 243 அல்லது தொலைபேசி இலக்கங்கள் -...
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் புதன்கிழமை (21) பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வட்டக்கச்சி வழித்தட சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, வட்டக்கச்சியில் இடைமறித்த தனியார் பஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள்,...
"ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை புலிகள் கொன்றனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது" இப்படி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: "அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன்,...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலுள்ள கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கல்லூரி முன்றலில் புதன்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் பொதுக்கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதாக, தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமாரால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 10 நிமிடங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து...
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த 2014ஆம் ஆண்டு 303 வீடுகள் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பரந்த அடிப்படையிலான கடன்திட்டம், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டம்,...
குடிநீரில் எண்ணெய் கலப்பு பிரச்சினைக்கான செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களை இனியும் முன்னெடுப்பது பயனற்றதாவே அமையும் என்று வடமாகாண விவசாய, சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தெரிவித்தார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு...
தமிழில் மட்டும் கலக்காமல் பாலிவுட்டிலும் தன் திறமையை காட்டி வரும் தனுஷ் விரைவில் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளார். தமிழில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு வெற்றி படங்களில் கொடுத்தா தனுஷ் பாலிவுட்டிலும் வெற்றி படலத்தை தன் தயாரிப்பு நிறுவனம் முலம் பல திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து படங்களை தயாரிக்க போகிறாராம். மிக விரைவில்...
எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. 92 ஒக்ரின் பெற்றோல் 117 ரூபாவாகவும் , 95 ஒக்ரின் பெற்றோல் 128 ரூபாவாகவும், டீசல் 95 ரூபாவாகவும், மண்ணெண்ணை 65 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும்...
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தனது வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகளை சரத் பொன்சேகா, 2010ஆம் ஆண்டு இழந்தார். இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பை 2011ஆம் ஆண்டு...
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிம் இராஜாங்க அமைச்சர் சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி பிரதியமைச்சர்கள் சமூக சேவைகள், நலன்புரி...
சனாதிபதித்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி பாலவை ஆதரிப்பதாக முடிவை அறிவித்ததன் பின்னர் அதற்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரான சிவகரனினால் கட்சி உறுப்பினர் மறவன்புலோ சந்திதானந்தனுடன் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கட்சியில்...
உலகக்கோப்பை போட்டிகள் தற்போது நடத்தப்படும் முறை பிடித்தமானதாக இல்லை. சுலபமாக கணித்து விடக்கூடியதாக இருக்கிறது என்று ராகுல் ராவிட் விமர்சித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தில் ராவிட் கூறியதாவது: "எனக்கு இப்போது நடத்தப்படும் முறை பிடிக்கவில்லை. காலிறுதிக்கு முன்னேறும் டாப் 8 அணிகள் எதுவென்று முன் கூட்டியே...
Loading posts...
All posts loaded
No more posts