Ad Widget

நுண்கலை பீட மாணவர்களின் போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்ந்தது!

யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கை மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி இன்று செவ்வாய்க்கிழமையும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடந்த காலத்தில் தமக்கான பரீட்சைகள் சீராக நடை பெறவில்லையெனவும் ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீட்த்தின் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைக்கான பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்து மூன்றம்சக் கோரிக்கைகளை...

யுவதியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் எடுக்கச் சென்றவர்கள் கிணற்றினுள் சடலம் காணப்படுவதை அவதானித்துள்ளனர். இதுகுறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல்கொடுக்கப்பட்டு, பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா, வேப்பங்குளம், 7 ஆம் ஒழுங்கைச் சேர்ந்த குணரட்ணம்...
Ad Widget

யாழ். நகரிலுள்ள இறைச்சிக்கடைகள் பூட்டு

யாழ். மாநகர சபைக்குட்பட்ட நாவாந்துறை, பண்ணை ஆகிய பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக்கடையின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (17) தமது கடைகளை பூட்டி ஆடு, மாடுகள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை தருமாறு மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனிடம் மகஜர் கையளித்துள்ளனர். யாழ்.மாநகர சபையின் கேள்வி அறிவித்தல் மூலம் கடைகளை குத்தகைக்கு எடுத்த இறைச்சிக் கடைக்காரர்கள், பண்ணையிலுள்ள கொல்கலனுக்கு ஆடு,...

சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் ஏகமனதாக ஏற்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் சபையில் ஏகமனதாக திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் 2ஆம் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குழு நிலைக்கு மாறிய சபையில் 16 சரத்துக்களை கொண்ட நியதிச்சட்டம் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றன. திருத்தங்களுடன் நியதிச்சட்டம் சபையில் அமைச்சர் சத்தியலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அதனை உறுப்பினர் பரஞ்சோதி...

விபத்தில் இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம், அச்சுவேலி அந்தோனியார் தேவாலய முன்றலில் பஸ் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனொருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறையை சேர்ந்த வி.ரவீந்திரன் (30) என்பவரே படுகாயமடைந்தார். வீதியொன்றில் திரும்ப முற்பட்ட பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....

தவராசாவுக்கு கூட்டமைப்பு அழைப்பு

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவை ஆளுங்கட்சியின் பக்கம் வந்து அமரும்படியும் தங்களின் சில உறுப்பினர்களை எதிர்க்கட்சியின் பக்கமும் அமருவதற்கும் அனுமதிப்பதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களின் ஒழுங்குகள், சபையில் நடந்துகொள்ளும்...

வவுனியா அரச அதிபருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் சபையில் கொண்டுவரப்பட்டு ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . வீட்டுத்திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா சிதம்பரபுரம் மக்கள் கடந்த 2ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினை வழங்கவும்...

யாழ். வந்த மோடிக்கு மக்களின் வரவேற்பு போதாது – தவராசா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார். வடக்கு மாகாண சபையின் 26ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடதொகுதியில் இடம்பெற்று வருகின்றது ....

இந்திய பிரதமருக்கு பரிசுப்பொருள் வழங்கக்கூட எங்களை அனுமதிக்கவில்லை – முதல்வர் சி.வி

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பிரிவினரால் அசௌகரியங்களுக்கு...

19ஆவது திருத்தத்துக்கான வர்த்தமானி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொதுமக்கள் தங்களுடைய ஆலோசனை மற்றும் கரிசனையை இரண்டுவாரக்காலத்துக்குள் சமர்ப்பிக்க முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. வர்த்தமானி இணைப்பு

முறையற்ற நியமனம்; விசாரணைக்கு 7 பேர் கொண்ட குழு

வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள முறையற்ற நியமனங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 26ஆவது மாதாந்த அமர்வு இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இன்றைய அமர்விலேயே முறையற்ற நியமனம் தொடர்பில் விசாரணையினை...

யாழ். இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இத்தாலி செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கடவுச்சீட்டு விஸாக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இவ்விருவரும் பஹ்ரைனூ டாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். மிஹின் லங்கா விமான சேவையினூடாக பஹ்ரைன் செல்வதற்காக நேற்று...

பீல்ட் மார்ஷலாகிறார் பொன்சேகா!

இலங்கையில் உள்நாட்டுப்போர் உக்கிரமடைந்து காணப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 'பீல்ட் மார்ஷல்' பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இராணுவ அதிகாரியொருவர் பீல்ட் மார்ஷலாகத் தரமுயர்த்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி...

வளலாய் காணி உரிமையாளர்கள், துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வளலாய் பிரதேசத்தில், காணி உரிமையாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவு மக்கள், அவர்களின் காணிகளைச் சென்று அடையாளப்படுத்த வெள்ளிக்கிழமை (13) அனுமதி வழங்கப்பட்டது. உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவைச்...

அத்துமீறுவோரை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உண்டு – ரணில்

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த கடற்படையினருக்கு அதிகாரம் உள்ளது என இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள செவ்வியால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

மண்எண்ணெய் அருந்திய குழுந்தை பரிதாபச் சாவு

வல்வெட்டித் துறையைச் சேர்ந்த விஜிதரன் கனிஸ்ரா என்ற ஒன் றரை வயதுக் குழந்தையே யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தது. வீட்டில் தாயார் விளக்குக்கு மண் எண்ணெய் விடும் பொழுது அருகே இருந்த குழந்தை, தாயார் மற்றைய விளக்கை எடுத்து வரச் சென்றபோது போத்தலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து அருந்தி விட்டது. திரும்பி வந்த தாயார் குழந்தை...

உலகின் சிறந்த ஆசிரியருக்கு 1 மில்லியன் பரிசு

உலகின் சிறந்த ஆசிரியராக அமெரிக்காவை சேர்ந்த நான்ஸி அட்வேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை தான் உருவாக்கிய பள்ளியின் வளர்ச்சிக்கே கொடுக்க போவதாக அறிவித்துள்ளார். ஆசிரியர் பணியை சிறப்பிக்கும் வகையிலும், அதன் மதிப்பை உயர்த்தும் நோக்கத்துடனும் ‘உலக ஆசிரியர் விருது’ உருவாக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் சிறந்த ஆசிரியர்களை...

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உள்ளன! – சுரேஷ்

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உண்டு சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டல் அவற்றை முற்படுத்த தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களை தடுத்துவைக்கும் இரகசிய முகாம்கள் தொடர்பில் பாராளுமன்றில் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான இரகசிய முகாம்களே...

மன்னார் எலும்புக் கூடுகள் இருந்த இடத்தில் தோண்ட உத்தரவு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்டிருந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பகுதியில் 80க்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, கண்டெடுக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் தொடர்பான...

ஸ்ருதிஹாசனை மார்க்கெட்டிற்கு கூட்டிச்சென்ற விஜய்

விஜய்யின் புலி படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தகவலை நாம் அறிந்து வருகிறோம். தற்போது படத்தின் படப்பிடிப்பில் என்ன நடந்து வருகிறது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. கேரளாவில் வாகாமாம் என்ற இடத்தில் ஸ்ருதிஹாசன், விஜய் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படப்பிடிப்பு செய்து வருகின்றனராம். இந்த காதல் காட்சிகளை படமாக்குவதற்காக கலை இயக்குனர்...
Loading posts...

All posts loaded

No more posts