- Thursday
- March 28th, 2024
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் முதலமைச்சரின் கருத்து பெறப்பட்டு அதற்கிணங்கவே இடம்பெறுவதாக, மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சாலைகளுக்கான பேருந்து வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(15) யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,...
பண்டாரவளை - அம்பதன்டேகம - கலஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு காரணமாக 17 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. 25 அடி உயரமுடைய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய, அப்பகுதியில் வாழ்ந்த 17 குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இந்த நிலச்சரிவினால் தெய்வாதீனமாக உயிர்,...
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இளைய மகனால், தனது மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, குறித்த பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜித்த சேனாரத்னவின் மகனான எக்சத் சேனாரத்ன தனது மகளை வாகனம் ஒன்றில் வந்து கடத்திச் சென்றதாக அவரது தந்தை...
கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார். அதற்கான முன்னேற்பாடு, முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இதேவேளை, சட்டத்துறை விடயங்களில் அதிக பரிச்சயம் மிக்கவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி இன்று திங்கட்கிழமை மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடந்த காலத்தில் தமக்கான பரீட்சைகள் சீராக நடை பெறவில்லையெனவும் ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீட்த்தின் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைக்கான பரீட்சைகள் நடத்தப்படவில்லை...
இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிநிற்பதை இலங்கையில் வாழ்கின்ற சகலரும் எதிர்க்கின்றனர். அந்த கோரிக்கை இலங்கைக்கு அபகீர்த்தியானதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் ஐ.பி.டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர், மேலும்...
கே.கே.எஸ் வீதி இணுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிந்து தெல்லிப்பழை நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வானும் தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மயிலணியைச் சேர்ந்தவர்களான குணா மற்றும் பிரபா ஆகிய இருவருமே இவ்வாறு...
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது. இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே...
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவானார். முன்னாள் காணி அமைச்சரான ஜானக பண்டார தென்னக்கோன் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
அரியாலை பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வோரின் அட்டகாசம் தற்போது அதிகரித்து காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரியாலை நாவலடி கட்டட சந்தியில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் வீதியில், கடற்கரைக்கு அருகிலுள்ள தனியார் காணிகளில் இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்தனர். இது தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில், இரவு வேளைகளில் உழவு...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா அல்லது 13ஐ தாண்டி செல்வார்களா என்பதைவிட, நிர்வாகங்கள் சரியாக இயங்கவேண்டும். ஊழல் அற்ற சேவையாக இருக்கவேண்டும். இது போக்குவரத்துத் துறையிலும் இடம்பெற வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு பேரூந்துகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15)...
தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோபலம் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்...
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணொருவருக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தர்மம் வழங்கினார். வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு பஸ்கள் வழங்கும் நிகழ்வு யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர், பஸ்களை சாலை முகாமையாளர்களிடம் கையளித்தார். நிகழ்வு முடிவடைந்தததும், முதலமைச்சர் தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டத்...
2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப்போட்டியில் வெற்றிபெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார். அவர், தனது வாழ்த்துக்களை ஸ்கைப் ஊடாக தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆஸ்திரேலியாவில் 3 காலிறுதிப் போட்டிகளும்,...
யாழ்.மாவட்ட அரச அதிபராக இடமாற்றம் பெற்றுள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்டத்தில் தனது கடமைகளை எதிர்வரும் 23ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதற்குப் பதிலாக யாழ்.மாவட்ட அரச அதிபராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி...
வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குமாகாணத்திலுள்ள யாழ். மாவட்ட சாலைகளுக்கான புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ். மத்திய...
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதில் நடைபெற்றுள்ளது....
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரச் சென்றவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பப்புவா நியு கினீயின் மனுஸ் தீவு அகதி முகாமில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை காணப்படுவதாக, அங்கு சென்று தகவல் சேகரித்துள்ள ஊடகவியலாளர் இயய்ன் பிளாக்வெல் கூறுகிறார். மனுஸ் தீவில் உள்ள இந்த அகதிகள் தடுப்பு முகாமில் ஆயிரத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அது சுகாதாரக்...
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று...
Loading posts...
All posts loaded
No more posts