Ad Widget

தண்ணீர் தாங்கியில் நஞ்சு கலப்பு: பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 'மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது...

அத்தனகல்ல பிரதான அமைப்பாளராக அர்ஜுன

சுதந்திரகட்சியின் அத்தனகல்ல பிரதான அமைப்பாளராக அர்ஜுன ரனதுங்க நேற்று (18) நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுபகல் (18) இந்நியமனம் வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
Ad Widget

சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமருமான லீயின் உடல்நிலை கவலைக்கிடம்!

சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமருமான லீ குவான் ஜியூ வின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் உள்ளதாகவும் தற்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 91 வயதாகும் லீ சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆறு வாரங்களாக...

இனி பேஸ்புக்கில் லைக் மட்டுமல்ல பணமும் கொடுத்து உதவலாம்!

முன்பு, ஏழை மக்கள் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பணமின்றி தவிக்கும் போது பேஸ்புக் நிறுவனம் ஒரு ஷேருக்கு இத்தனை பணம் என்று கொடுத்து வந்தது. இனி அப்படி பணமின்றி தவிக்கும் மக்களுக்கு நம்மால் முடிந்தளவு பணத்தை, அதுவும் ஒரு புகைப்படத்திற்கு லைக் கொடுக்கும் நேரத்தில் பணம் கொடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்?....

வௌிநாட்டுத் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ள பலரை விடுவிக்கத் தீட்டம்

வௌிநாட்டுத் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த 16 குழுவினர் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு சில புலம்பெயர் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் உரிய ஆதாரங்கள் இன்றி...

வளங்கள் இல்லையென மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி, கிளிநொச்சி, வேரவில் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் வித்தியாலய முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தங்களுக்கான வளங்கள் இல்லையெனவும் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தேவையெனவும் அவர்கள் வலியுறுத்தினர். பாடசாலை மாணவர்களுடன் பெற்றோர்களும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர். உயர்தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், சித்திரம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள்...

தண்ணீர் தாங்கியின் அருகிலிருந்து நஞ்சுப் போத்தல் மீட்பு

யாழ்ப்பாணம், ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையின் தண்ணீர் தாங்கியினுள் நஞ்சு கலந்தமையால் அதனை பருகிய 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் மூவர், சுயநினைவை இழந்துள்ளனர் என்றும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. மேற்படி...

மஹிந்த, கம்மன்பில, விமல் ஆகியோரின் முகப்புத்தகங்கள் மீது சைபர் தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் முகப்புத்தக பக்கங்கள், சைபர் தாக்குதல்களால் முடக்கப்பட்டுள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. உதய கம்மன்பிலவின் முகப்புத்தக பக்கத்துக்கான விருப்புகள், கடந்த வெள்ளிக்கிழமை 7 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 1,200 ஆல் குறைவடைந்துள்ளதாக பிவிதுரு...

தண்ணீர் பருகிய 26 மாணவர்களுக்கு மயக்கம்

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையை சேர்ந்த 26 மாணவர்கள் இன்று வியாழக்கிழமை (19) காலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நீர்த்தாங்கியிலிருந்த நீரைப் பருகிய 26 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அணி தோல்வி : வாள்வெட்டில் இருவர் படுகாயம்!

இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர். நேற்றுப் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்க்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நேற்று நடந்த இலங்கை, தென்னாபிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி...

இனப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே தீர்வு!

"இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு அமைக்கப்படும் தேசிய அரசே 13ஆவது அரசமைப்புத் திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும். இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்கள், ஊடக...

வடக்கின் வீதி இணைப்புக்கு 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

வட மாகாணத்திலுள்ள வீதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ், வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் புதன்கிழமை (18) தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைபெறுகின்றது. 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத்...

 யாழ். உயர்பாதுகாப்பு வலய காணிகளை ஜனாதிபதி கையளிப்பார்

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படும் 450 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை (23) கையளிக்கவுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, அக்காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதியும் பிரதமரும் கையளிப்பார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்தார்....

கிளிநொச்சி விபத்தில் முதியவர் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிப்போ சந்தி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில், கிளிநொச்சி ஆனந்த நகரைச்சேர்ந்த 75வயதான அப்பன் நல்லத்தம்பி என்பவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகபுரத்தை நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டியும் டிப்போ சந்தியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. புதன்கிழமை இரவு...

ரவிராஜ் கொலை வழக்கு: மூவரையும் சி.ஐ.டியில் தடுத்து வைக்க அனுமதி

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான முனசிங்க உட்பட கடற்படை அதிகாரிகள் மூவரையும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரையிலும் குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைப்பதற்கு கொழும்பு நீதவான் அனுமதியளித்தார். ரவிராஜ் எம்.பி.யும்...

மணல் அகழ்வை தடுக்க எவரும் முன்வரவில்லை வளலாய் மக்கள் குற்றஞ்சாட்டு

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு எந்த வொரு தரப்பினரும் முன்வருகின்றார்கள் இல்லை என்று வளலாய் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 25 ஆண்டு காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப் பட்ட வளலாய் பிரதேசத்தில் இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர் என்று அந்த மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை வளலாய் கிராம...

மும்பையில் சூர்யாவின் புதிய படத்துக்காக ரூ 4 கோடியில் பிரமாண்ட செட்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் 24-ன் படப்பிடிப்பு மும்பையில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இந்தப் படத்துக்காக ரூ 4 கோடி செலவில் பிரமாண்டமாக மும்பையில் செட் போடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் முடிந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து 24 படத்தின்...

ஐரோப்பாவில் உள்ள நாட்டுக்கு தூதுவரான சுஹாசினி

தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகைகளில் ஒருவர் சுஹாசினி மணிரத்னம். பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான சுஹாசினி ஐரோப்பாவில் உள்ள “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நியமிக்கப்பட்டார். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அந்த நாட்டின் தூதுவரான சாம்...

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு...

இலங்கையை இலகுவாக வென்றது தெ.ஆபிரிக்கா

உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. சிட்னியில் நிறைவடைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனையடுத்து துடுப்புடன் களமிறங்கிய அந்த அணியினர் தென்னாபிரிக்க வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாது வரிசையாக வௌியேறினர்....
Loading posts...

All posts loaded

No more posts