Ad Widget

வித்யா படுகொலை: பொலிஸ் அதிகாரி கைது?

புங்குடுதீவு மாணவியான வித்யாவின் படுகொலைக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை, விடுவிக்குமாறு ஆலோசனை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைதுசெய்வதற்கான ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிவிற்கு வந்தது வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.முடிவுற்ற விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி...
Ad Widget

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எம்.எம்.றியாழ் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் 12 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை...

வித்தியா கொலை வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இந்த மாத இறுதிக்குள், சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் தெரிவித்தார். இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கின் நிலைமை தொடர்பில் மாணவி...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சட்டமா அதிபர் திணைக்களம் சரியான முடிவை எடுக்கும்

சட்டமா அதிபர் திணைக்களம் சரியான நடவடிக்கை எடுக்கும் வகையில், குற்றப் புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கையானது உரிய முறையில் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (20) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12...

புங்குடுதீவு மாணவி படுகொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது விண்ணப்பங்கள் செய்யவுள்ளீர்களா...

வித்தியா கொலை வழக்கு : இன்றும் தீர்வில்லை

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை...

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபரான பெண் நேற்றய...

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 3 மாதங்களுக்கு நீடிப்பு

கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை...

வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் ஒத்தி வைத்தார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26) மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை...

சுவிஸ் குமாரின் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்கு சந்தேக நபர்களுக்கு அனுமதி!

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான மகாலிங்கம் தவநிதி என்பவரின் மரண சடங்கில் கலந்துகொள்ள மற்றைய சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் இருவருக்கும் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித்துள்ளார். வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவல்துறை...

சுவிஸ்குமாரின் தாயார் சிறையில் மரணம்!

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தாயார் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். மகாலிங்கம் தவநிதி என்பவரே உயிரிழந்த பெண்ணாவார். கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு...

வழக்கை முழுமையாக விசாரித்த பின்னரே டி.என்.ஏ அறிக்கை தொடர்பில் கூற முடியும்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அது பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே, மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் நேற்று புதன்கிழமை (15) தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கடந்த மே...

வித்யா கொலை வழக்கு உண்மை தெரிந்த பொது மக்கள் சாட்சியமளிக்கலாம்

வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் உண்மைகளை அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் என ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனை நேற்றய தினம் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக நீதிவான் குறிப்பிட்டிருப்பதாவது, இத்தகைய பாரதுரமான...

வித்யா கொலை சந்தேகநபர்கள் 12 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும்...

வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிற்கு விளக்க மறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை முற்படுத்திய வேளையிலையே அவர்கள் இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். கடந்த...

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார், நீதவானிடம் நேற்று புதன்கிழமை (01) தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களுக்கும் எதிரான வழக்கு, ஊர்காவற்துறை...

வித்தியா கொலை வழக்கு: விரைவில் தமிழ்மாறனும் காவல்துறை அதிகாரியும் கைதாகலாம்!

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவரைத் தப்பவைக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் இருவரும் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது. வித்தியாவின் கொலைச் சம்பவம் நடைபெற்றபோது யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகராக லலித் ஜெயசிங்க கடமையிலிருந்தார். இவர் சட்டவிரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறனின் மாணவர் எனத் தெரியவருகின்றது. சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட...

புங்குடுதீவு மாணவி படுகொலை: மரபணு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இதுவரை காலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த மரபணு அறிக்கை இன்றைய தினம் பெரும்...

வவுனியாவில் வித்தியாவின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

புங்குடுதீவில் காமுகர்களால் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டது. இதேவேளை,...
Loading posts...

All posts loaded

No more posts