Ad Widget

ஆள் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்யா! அதிரடி திட்டங்கள் அறிவிப்பு

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் போருக்கு ஆள் திரட்டும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, இராணுவத்தில் சேர முன்வருவோருக்கு வரிச்சலுகை, கடன் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த முறை, 3 இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டை...

நெதர்லாந்திற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்ததையடுத்து அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் சர்வதேச குற்றவியல்...
Ad Widget

சீன ஜனாதிபதியிடம் புடின் பகிரங்கமாக வெளியிட்ட கருத்து

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் அரசுப் பயணத்தின் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், முறைசாரா...

புடினின் மரியுபோல் பயணத்திற்கு உக்ரைன் கொடுத்த பதிலடி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்ட சென்றமைக்கு உக்ரைன் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு புடின் நேற்று இரவு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த புடின், அங்கிருந்த கலை பாடசாலை, குழந்தைகள் மையம் மற்றும் Nevsky microdistrictயில் வசிப்பவர்களையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் “குற்றவாளி எப்போதும்...

உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தீ விபத்தினை தடுக்க...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது...

சரமாரியான வெள்ளை பாஸ்பரஸ் குண்டு தாக்குதலால் மிரண்டு போயுள்ள ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர் தாக்குதல் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்முட் நகரில் இருந்து அரை மணி நேரம் தொலைவில் இடைவிடாமல் சண்டை தொடர்ந்து நடைபெற்று...

வல்லரசையே கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுத்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா

“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்.”என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“நமக்கு எந்த வகையான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை எல்லைப் பகுதியிலுள்ள நகரங்களின் வெற்றியே தீர்மானிக்கிறது, அங்கு உக்ரேனியர்களின்...

பப்பூவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்பூவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்கு பகுதிதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

பாக்முட் நகரில் முன்னேறும் ரஷ்ய படைகள்: உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்படும் அபாயம்

வாழவே தகுதியில்லாத அளவிற்கு உக்ரைனின் பல நகரங்கள் போரால் உருக்குலைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் எல்லை நகரமான பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கைகளில் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்பட்டு விடும் என உக்ரைன் அதிபர் கவலை தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் பாக்முட் நகரை...

ஜேர்மனியில் யெஹோவா சாட்சிகள் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் யெஹோவா சாட்சிகள் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 09.05 மணியளவில் (இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.35 ) இச்சம்பவம் இடம்பெற்றது. ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அந்நபரும் கொல்லப்பட்டுள்ளார் என நம்புவதாகவும் பெரிலஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர்...

உக்ரைன் கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறிய ரஷ்ய டாங்கிகள்

உக்ரைன் - ரஷ்ய போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் போர் பாக்முட் நகரில் 10 மாதங்களுக்கு மேலாக இருதரப்பினரும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் இராணுவம் பின்வாங்கப்போவதில்லை என அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவ்வாறான பின்னணியில்...

உக்ரைன் யுத்த கைதியை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற ரஷ்ய படை!

உக்ரைனின் நிராயுதபாணியான போர்க் கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதுங்குழியொன்றில் இருந்த உக்ரைன் போர் வீரரை சுட்டுக்கொல்லும் காணொளியும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டை சேர்ந்த போர்க்கைதியை சுட்டுக்கொன்ற ரஸ்ய படையினரை கண்டுபிடிக்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளதுடன் கொலைகாரர்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர் கைதி,...

தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம் !பிரித்தானிய உளவுத்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவின் கடுமையான அழுத்தத்தின் கீழ் உக்ரைனிய பாதுகாப்பு படைகள் இருப்பதாக தகவல்...

வல்லரசையே கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுத்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா

மிக இலகுவில் உக்ரைனை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கனவை உக்ரைன் படையினர் தகர்த்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனிய பகுதியில்...

உக்ரைனை அடித்து நொறுக்கி அடிபணிய வைக்க ரஷ்யா திட்டம்!

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனை ரஷ்ய இராணுவம் அடிபணிய வைக்கும் என்பதில் ரஷ்ய ஜனாதிபதிக்கு அபார நம்பிக்கை உள்ளதாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி இறுதியில் ஆரம்பமான நிலையில் தற்போது வரை போர் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. இவ்வாறான...

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது!! – அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவினால் நேற்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2009இல் இலங்கை அரசாங்கத்தினால் இராணுவ ரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின் சர்வதேச...

ஐரோப்பிய நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்!!

ரஷ்ய ஜனாதிபதி புடினின் மதிப்பு மிக்க உளவு விமானமானது ட்ரோன் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானமானது ரஷ்யாவுக்கு நட்பு நாடான பெலாரஸில், ரஷ்யாவுக்கான விமான தளத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன் கடைகளில் வாங்கக் கூடிய ட்ரோன்களால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா மொத்தமாக பயன்படுத்தும் 6 உளவு விமானங்களில் ஒன்று தான்...

மேற்குலக நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டம் – சர்ச்சையை கிளப்பும் புடின்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கி தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி புடின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே...

உக்ரைன் – ரஷ்ய போருக்கான காரணத்தை முதன்முதலில் வெளியிட்ட புடின்

உக்ரைனில் ரஷ்யாவுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை மீட்கவே தமது இராணுவம் போராடி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும் வாய்ப்புகள் உள்ளதாக உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் தாக்குதலுக்கு ஆதரவாக மாஸ்கோவில் அரசால் ஏற்பாடு...
Loading posts...

All posts loaded

No more posts