Ad Widget

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா! கடும் கோபத்தில் புடின்

கனடா- ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு விமானமொன்றை உக்ரைனுக்கு வழங்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க ட்ரூடோ நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் 2022 பெப்ரவரி மாதம் முதல் ரொறன்ரோவின்...

திடீரென உக்ரைனுக்கு சென்ற புடின்!

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது புடினின் உதவியாளர்களில் ஒருவர் அணு ஆயுத சூட்கேஸை சுமந்துவரும் வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய இராணுவ தலைமையகத்திற்கு சென்ற புடின், கள நிலவரம் குறித்து படைத் தளபதிகளிடம் கேட்டறிந்ததாக...
Ad Widget

எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா-முர்சாவுக்கு ரஷ்யாவில் 25 ஆண்டுகள் சிறை

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைக் எதிரித்து விமர்சித்த குற்றச்சாட்டில் எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா-முர்சாவுக்கு ரஷ்யாவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ரஷ்ய இராணுவத்தைப் பற்றிய "தவறான" தகவல்களைப் பரப்பி, "விரும்பத்தகாத அமைப்புடன்" இணைந்திருந்த தேசத் துரோகத்தின் குற்றவாளியாக கருதப்படுகின்றார். தேசத்துரோகம் மற்றும் ரஷ்ய இராணுவத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டின் கீழ் கிரெம்ளின் எதிர்ப்பாளர்...

உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பு!!

உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போலந்தும் ஹங்கேரியும் தடை விதித்துள்ளன. போலந்து பிரதம மந்திரி அலுவலகம் இந்த நடவடிக்கை "போலந்து விவசாய சந்தையை ஸ்திரமின்மைக்கு எதிராக பாதுகாக்க" என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, போலந்து நாட்டின் முடிவு குறித்து உக்ரைன் வருத்தம் தெரிவித்துள்ளது. "ஒருதலைப்பட்சமான கடுமையான நடவடிக்கைகளால் பல்வேறு சிக்கல்களைத்...

ரஷ்யாவிற்கு இரகசியமாக உதவி செய்ய திட்டம்!மேற்குலகிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நாடு

கடந்த வார இறுதியில்,மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பெப்ரவரி 17 ஆம் திகதியிட்ட ஆவணத்தின் ஒற்றை பகுதி, ஜனாதிபதி அல்-சிசி மற்றும் மூத்த எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை...

ரஷ்யாவின் மிகக் கொடூரமான தாக்குதல்கள்! முற்றிலுமாக அகற்றப்படும் மரியுபோல் தொடருந்து நிலையம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தொடருந்து நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக நாடுகடத்தப்பட்ட மரியுபோல் நகரத்தின் மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ(Petro Andriushchenko) தெரிவித்துள்ளார். போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய இராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது....

இரவோடு இரவாக உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்!

இரவோடு இரவாக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளதாக உக்ரைனின் விமானப்படை கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா, ஈரானில் தயாரிக்கப்பட்ட 17 ஷாஹெட் ட்ரோன்களை அனுப்பி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருங் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாகவும் குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடிசா...

ரஷ்ய வீரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

உக்ரைன் - ரஷ்ய போர் ஓராண்டினை கடந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் நடவடிக்கையில் போது ரஷ்ய வீரர்கள் அதிகப்படியாக மது அருந்தி போதையில் போரிட்டுள்ளமையே உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த போர்...

தீவிரமடையும் போர்களம்!ரஷ்யா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!

போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படை வீரர்களுக்கான வெடிமருந்துகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergey Shoygu) தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளுக்கு மிகவும் தேவையான வெடி மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்பட்டது என்றும், அவற்றை அதிகரிக்க மாஸ்கோ நடவடிக்கை எடுத்துள்ளது...

ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்! அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

ரஷ்ய வாழ் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்திள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை...

உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஷ்ய சிறுமி வரைந்த ஓவியம்! தந்தைக்கு நேர்ந்த கதி

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷ்யாவிலும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பள்ளியில் ஒரு ஓவியத்தை வரைந்தாள். அதில் உக்ரைனிய கொடியுடன் நிற்கும்...

ரஷ்ய – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன்! டிரம்ப்

அதிபராக நான் மீண்டும்தேர்வு செய்யப்பட்டால், முதற்கட்டாமாக ரஷ்ய அதிபர் புடினையும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் நேரில் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான டொனால்டு...

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் : மாணவர்கள் 6 பேர் பலி!!

அமெரிக்காவில் நாஸ்வில் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று மாணவர்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர் ஆரம்பபாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பலியானவர்கள் அனைவரும் 9 வயது மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 28 வயது நபரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் அவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆள் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்யா! அதிரடி திட்டங்கள் அறிவிப்பு

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் போருக்கு ஆள் திரட்டும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, இராணுவத்தில் சேர முன்வருவோருக்கு வரிச்சலுகை, கடன் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த முறை, 3 இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டை...

நெதர்லாந்திற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்ததையடுத்து அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் சர்வதேச குற்றவியல்...

சீன ஜனாதிபதியிடம் புடின் பகிரங்கமாக வெளியிட்ட கருத்து

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் அரசுப் பயணத்தின் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், முறைசாரா...

புடினின் மரியுபோல் பயணத்திற்கு உக்ரைன் கொடுத்த பதிலடி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்ட சென்றமைக்கு உக்ரைன் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு புடின் நேற்று இரவு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த புடின், அங்கிருந்த கலை பாடசாலை, குழந்தைகள் மையம் மற்றும் Nevsky microdistrictயில் வசிப்பவர்களையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் “குற்றவாளி எப்போதும்...

உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தீ விபத்தினை தடுக்க...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது...

சரமாரியான வெள்ளை பாஸ்பரஸ் குண்டு தாக்குதலால் மிரண்டு போயுள்ள ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர் தாக்குதல் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்முட் நகரில் இருந்து அரை மணி நேரம் தொலைவில் இடைவிடாமல் சண்டை தொடர்ந்து நடைபெற்று...
Loading posts...

All posts loaded

No more posts