Ad Widget

சர்வதேச எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய விமானம்: அச்சத்தில் உலக நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய அணு ஆயுதக்கட்டுப்பாட்டு விமானம் நேட்டோ எல்லைக்கருகே பறந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ சார்பில் எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இரண்டு சீறிப்பறந்து இந்த ரஷ்ய...

உக்ரைனின் திடீர் தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்ய இராணுவம்

ரஷ்ய தலைநகா் மொஸ்கோவில் உக்ரைன் இராணுவம் நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலை ரஷ்ய இராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "மொஸ்கோவை நோக்கி நேற்றைய தினம்(04.06.2023) உக்ரைனின் 5 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. அவற்றில் 4 விமானங்களை ரஷ்யாவின்...
Ad Widget

ரஷ்யாவிடமிருந்து மற்றுமொரு பகுதியை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்ய படைகளிடமிருந்து 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கன்னா மல்யார் இதனை தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை கொண்டு நடத்திய எதிர்தாக்குதல் மூலமாக, கடந்த வாரத்தில் 37 சதுர கிலோமீட்டர் நிலத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கயைம, மெலிடோபோல் மற்றும் பெர்டியன்ஸ்க்...

ரஷ்ய இராணுவ தளபதியை கடத்த முயற்சி! வாக்னர் கூலிப்படையின் இரகசிய திட்டம் அம்பலம்

வாக்னர் கூலிப்படைத்தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய இராணுவ தலைவர்களை கடத்த திட்டமிட்டிருந்ததாக இரகசிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த இரகசிய சதித்திட்டத்தை பாதுகாப்புப்படையினர் முடக்கிவிட்டார்கள் எனவும், இதனால் திட்டமிட்டிருந்த கிளர்ச்சியை முன்னெடுக்கும் நிலைக்கு யெவ்ஜெனி பிரிகோஜின் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வாக்னர் கூலிப்படையின் தலைவர் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோரை...

உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பல் தயார்

உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த கப்பலின் பெயர் Icon of the Seas, 365 மீட்டர் (சுமார் 1,200 அடி) நீளமும் 2,50,800 டன் எடையும் கொண்டது. இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும்...

உக்ரைன் வெளியிட்ட பரபரப்பு காணொளியினால் பதற்றம்

உக்ரைனின் பக்முட் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டை தொடர்பான காட்சிகளை உக்ரைனின் 3வது தாக்குதல் படை வெளியிட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளையும் சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன், தற்போது...

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளால் திடீரென பின்வாங்கிய வாக்னர் ஆயுதக்குழு!

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாகவே மாஸ்கோவை கைப்பற்றும் முயற்சியிலிருந்து வாக்னர் குழு பின்வாங்கியதாக பிரித்தானிய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாக்னர் ஆயுதக்குழு தளபதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் தமது வாக்னர் வீரர்கள் 2 ஆயிரம் பேரை கொன்றுவிட்டதாகக் கூறி...

புடினுக்கு எதிராக மாறிய வாக்னர் குழு! கடும் அதிர்ச்சியில் புடின்

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழு அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியதால் ஜனாதிபதி புடின் அதிர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாஸ்கோவை விட்டு தனி விமானத்தின் மூலம் அவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. முன்னாள் ரஷ்ய அதிகாரியான டிமிட்ரி உக்டின் மற்றும் புடினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் இணைந்து 2014ம் ஆண்டு...

ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்துவது நிச்சயம்: அமெரிக்கா எச்சரிக்கை!!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தந்திரோபாய அணுவாயுதங்களைப்(tactical nuclear) நிச்சயம் பயன்படுத்துவார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மேலும் கடந்த வாரம், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தனது நாட்டு தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கத் தொடங்கியுள்ளதாகக் பைடன் குற்றம் சுமாட்டியுள்ளார். அவற்றில் சில 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி...

சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி!!

ஹொண்டு​ரஸ் நாட்டில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிாிழந்தனா். மத்திய அமெரிக்கா நாடான ஹொண்டு​ரஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகில் உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு குழுக்களாக...

உக்ரைனின் அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்த ரஷ்யா!

ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் தீவிரமடைந்த போர் நடவடிக்கையின் போது உக்ரைனில் இராணுவ குடோன்களில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் எம்.ஐ.8 ஹெலிகாப்டர் மற்றும் பல டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர்...

ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் முதல் நாடு!!

பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்ய அரசு மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான முடக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை சட்டம் உறுதி செய்யும், அத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் ஐரோப்பிய அரசாங்கம் என பிரித்தானியா மாறவிருக்கிறது. இதுவரையான காலபகுதியில், சுவிட்சர்லாந்து உட்பட பல மேற்கத்திய அரசாங்கங்கள், அமெரிக்கா...

ரஷ்யாவிற்கு மறைமுகமாக கிடைக்கும் ஆயுத உதவி! இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றம்

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக இதுவரை சீனா ஆயுதங்களை வழங்கவில்லை, இனியும் வழங்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவொன்றிின் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை இதனை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா பிரச்சினை மற்றும் தைவான் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக...

கொன்று குவிக்கப்படும் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சக வீரர்களை ரஷ்ய இராணுவத்தினர் கொன்று குவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான காணொளி ஒன்றை உக்ரைன் ட்ரோன் விமானம் ஒன்று பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்த காணொளியானது 14 நொடிகள் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் டெலிகிராம் சமூக ஊடகம் ஒன்றில் முதலில் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

உக்ரைனில் ஆயுதங்களை குவிக்கும் மேற்கத்திய நாடுகள்! விரட்டியடிக்கப்பட்ட ரஷ்ய படைகள்

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய படைகள் வசமிருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது. தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள...

அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சீனா – உலக நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை!

சர்வதேச அளவில் காணப்படும் அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பல நாடுகளும் சீனாவுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இந்த விடயம் உலக ஆராய்ச்சியாளர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும் உலகளவில் பார்க்கும் போது அணு...

ரஷ்ய கடற்படை கப்பலை தாக்கும் முயற்சியில் உக்ரைன் தோல்வி!!

கருங்கடலில் உள்ள முக்கிய எரிவாயு குழாய்களுக்கு அருகே ரஷ்ய கப்பலை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்யா கூறியுள்ளது. ​​கருங்கடலில் ஆறு அதிவேக ட்ரோன் படகுகள் மூலம் ரஷ்ய கடற்படை கப்பலை தாக்க உக்ரைன் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகமான...

உக்ரைன் போர் ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கெர்சன் நகரில் உக்ரைனின் Su-25 போர் ஜெட் விமானங்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜாபோரிஜியா பிராந்தியத்தில் உக்ரைனின் மூன்று தாக்குதலை ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது....

ரஷ்யாவின் மற்றுமொரு தாக்குதல்! உக்ரைனில் காற்றில் கலக்கும் விஷ வாயு!!

உக்ரைனில் உலகின் மிகப்பெரிய அம்மோனியா குழாய் வெடித்து விஷ வாயு காற்றில் கலப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள Masiutovka கிராமத்தில் செல்லும் குழாய் வெடித்து அப்பகுதி எங்கும் மேக மூட்டமாக வாயு காற்றில் கலப்பது காணொளி ஒன்றில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக குறித்த குழாய் வெடிப்பு நேர்ந்திருக்கலாம் என்று...

ரஷ்யாவின் தாக்குதலால் கடும் கோபத்தில் ஜெலென்ஸ்கி!

உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கரவாத நாடு என்பதை நிரூபித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது டெலிகிராம் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு...
Loading posts...

All posts loaded

No more posts