Ad Widget

உக்ரைன்-ரஷ்ய போரில் தீவிரமடையும் தாக்குதல்கள்! ஒரே இரவில் பலர் பலி

கருங்கடலில் ரஷ்ய டேங்கர் மீது கிவ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஒரே இரவில் தீவிர வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் உக்ரைனில் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து,...

உலக பேரழிவிற்கு திட்டமிடும் ரஷ்யா! உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி

உலக பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இஸ்மாயில் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி காணொளி வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி, சர்வதேச உணவு சந்தையில்...
Ad Widget

பற்றியெரியும் உக்ரைன் தானிய சேமிப்பு கிடங்குகள்!!

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Izmail பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை எச்சரித்திருந்தது. இதில் தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படும்...

ரஷ்ய தலைநகரில் அடுத்தடுத்து தீவிரமடையும் தாக்குதல்!

ரஷ்யாவின் தலைநகரான் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்றில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் கட்டடம் நேற்று மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியுள்ளதாகவும், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி!

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்கிய சுமியில்...

ரஷ்ய நகரை சரமாரியாக தாக்கிய உக்ரைன் ஏவுகணைகள்!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் உள்ள டோக்மாக்கின் முக்கியமான தளவாட மையத்தில் ராக்கெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோவால் நிறுவப்பட்ட பிராந்திய தலைவர் தெரிவித்துள்ளார். அவற்றில் மூன்று ராக்கெட்டுகள் வெடித்துள்ளதாகவும், நான்காவது ஒரு தொடருந்து நிலையம் அருகே விழுந்துள்ளது. ஆனால் வெடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். டோக்மாக்...

பகிரங்கமாக தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரைன் இராணுவம்!

ரஷ்யாவின் மற்ற ஏவுகணைகளை, உக்ரைன் இராணுவம் சுட்டுவீழ்த்தி வரும் நிலையில், 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணையை மட்டும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 20ஆம் திகதி ஒடெசா நகரம் மீது, ரஷ்யா இராணுவம், காலிபர், இஸ்கந்தர், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. காலிபர், இஸ்காந்தர் ஏவுகணைகளை...

உக்ரைன் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது: குற்றம் சுமத்தும் ரஷ்யா

மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், ரஷ்ய தற்காப்பு அமைச்சின் கட்டடங்களிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சிதைவுகள் காணப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு ஆளில்லான வானூர்திகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின்...

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் திணறும் உக்ரைன்! உலக நாடுகளுக்கு காத்திருக்கும் சிக்கல்

உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பழைமையான தேவாலயம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. இந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 போ் காயமடைந்துள்ளனர். நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் ஏவுகணை தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது....

இரவோடு இரவாக தாக்குதல் நடத்திய ரஷ்யா! உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

உக்ரைன் நகரங்களான ஒடிஷா மற்றும் கீவ் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை ரஷ்யா 18.07.2023 நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலக தலைவரால் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலில் ஒடிஷாவிலுள்ள உணவு தானியக் கிடங்குகளில் தீப்பற்றியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்புவீரர்கள் போராடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி அலுவலக தலைவரான Andriy Yermak, இந்த...

பாதையில் குவிக்கப்பட்ட சடலங்கள்! வாக்னர் படையினரின் கொடூர செயல் அம்பலம்!

வாக்னர் கூலிப்படையினர் தமது சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காத சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் கூலிப்படையினர் பயன்படுத்திய அதே பாதையில் தற்போது சடலங்கள் மீட்கபட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் துப்பாக்கியால்...

உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம்! ஜேர்மன் வெளியிட்டுள்ள தகவல்

உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,“பேச்சுவார்த்தைக்கு அடிப்படையே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்தான். ஆனால்...

ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

உக்ரைனை தாக்கி அழிக்கும் அளவிற்கு ரஷ்யாவில் கிளஸ்டர் குண்டுகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தினால், ரஷ்யாவுக்கு சொந்தமான கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த ரஷ்யாவுக்கு உரிமை உண்டு...

இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் 20 ஈரானிய ட்ரோன்கள்!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய 20 ஈரானிய ட்ரோன்களே இவ்வாறு உக்ரைன் விமானப்படையினால் இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது மேலும் இரண்டு...

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா! பகிரங்கமாக பைடன் வெளியிட்ட தகவல்

ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என பைடன் தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,"போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் நேட்டோ மற்றும் உக்ரைனுக்கு இடையிலான உறவு நீங்கி விடும் என ரஷ்யா ஜனாதிபதி...

மர்ம நபரால் பட்டப்பகலில் ரஷ்ய கடற்படை தளபதி சுட்டுக்கொலை!!

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய கடற்படை தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவரே வெளியில் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஸ்டானிஸ்லா கொலை தொடர்பில் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரை தேடிவருவதாக ரஷ்ய...

வாக்னர் கூலிப்படைத் தலைவரை சந்தித்த புடின்!

வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் 29ஆம் திகதி, புடின், வாக்னர் கூலிப்படைத் தலைவரான பிரிகோஜினை சந்தித்ததாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்...

ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை!!

உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பேய் படையின் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் பக்மூத் நகரத்தில் வைத்து ரஷ்ய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்திய படைகளின் துணைத்தளபதி எனவும்...

ஐஸ்லாந்தில் அதிகரிக்கும் நில அதிர்வுகள்!

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 4700 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வுகள் அப்பிரதேசங்களில் நிலச்சரிவு அபாய நிலைமையை அதிகரித்துள்ளதாக அரச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. அதிகரித்த நில அதிர்வுகள் மற்றும் எரிமலை சாம்பல் ஆகியவை எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபாய நிலைமையை...

ரஷ்ய அதிபர் புடினை பார்க்க கண்ணீர் விட்டு கதறியழுத சிறுமி!

ரஷ்ய அதிபர் புடினை காண முடியாமல் கதறியழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புடின் விருந்தளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள (Dagestan) தாகெஸ்தான் குடியரசுக்கு அதிபர் புடின் சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை பார்க்க 8 வயது சிறுமி (Raisat Akipova) ரைசாட் அகிபோவா வருகை தந்துள்ளார். இருப்பினும், கடும்...
Loading posts...

All posts loaded

No more posts