Ad Widget

‘ரத்த சிவப்பு’ நிலா : வரும் 28-ம் தேதி உலகம் அழிந்துவிடுமா?

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய...

மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என...
Ad Widget

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை சந்திக்க விரும்பும் பேஸ்புக் நிறுவனர்

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர் அகமது முகமது ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை சந்திக்க விரும்புவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், கூறியுள்ளார். பேஸ்புக்கில் அவர் இட்டுள்ள பதிவில் “ புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வமும், கனவும், லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் மாறாக கைது செய்யப்படக்...

இலங்கையில் நீதியைத் தேடி : ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்த உடல்கள்… கதறிய நெஞ்சங்கள்…

கொத்து கொத்தாய் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட தமிழர்கள்... குழந்தைகளும், பெண்களும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து மடிந்ததை காண்பவர்களின் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் ரத்தத்தை வரவழைக்கும் ஆவணபபடம்தான் 'இலங்கை - நீதியைத் தேடி'. இலங்கை இறுதிப்போரில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது "இலங்கை-நீதியைத் தேடி" என்ற ஆவணப்படம். போர் இறுதிக்காலங்களில்...

போதையை கைவிடுங்கள் கணவனின் பிணத்துடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட பெண்

போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப்...

சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

சிலி நாட்டின் வடக்கு கடலோரப்பகுதியான இலாபெல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவியலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது, கட்டிடங்கள் ஊசலாடியது போன்று குலுங்கின. இரவு நேரம் என்பதால், செய்வதறியாது...

போர்க்குற்றம் குறித்து உள் நாட்டு விசாரணை உகந்தது அல்ல ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த் 14 ந்தேதி தொடங்கியது.ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயித் அல்...

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா!- கெலம் மக்ரே பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குநர் கலம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த கலம் மக்ரே, அமெரிக்க மற்றும் இலங்கை அரசை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது.சீனாவுக்கு ராஜபக்ச...

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்றார்

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக டோனி அப்பாட் கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவர் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்ற தவறி விட்டதாக மூத்த மந்திரி டர்ன்புல் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆளும் தாராளவாத கட்சிக்குள் நடந்த ஓட்டெடுப்பில் டர்ன்புல் வெற்றி பெற்றார். டோனி அப்பாட் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் பதவி...

கிரீசுக்கு படகில் சென்றபோது விபத்து: 4குழந்தைகள் உட்பட 22 அகதிகள் பரிதாபமாக பலி

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.சிரியாவில் இருந்து செல்கிற அகதிகள், துருக்கி வழியாக கிரீஸ் நாட்டின் கொஸ் தீவுக்கு செல்கின்றனர். இப்படிஒரு படகு 200-க்கும் மேற்பட்ட அகதிகளை சுமந்து கொண்டு துருக்கியில் இருந்து கடல் மார்க்கமாக ஒரு மரப்படகில் கொஸ்...

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு

இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர் செயித் ராத் அல் உசைன் அவ்வாறு தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில்...

நீதிக்கான தேடல் ஆவணப்படம் குறித்து இலங்கை அரசுடன் பேசத் தயார்! – கெலம் மக்ரே

நீதிக்கான தேடல் ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கெலம் மக்ரே அறிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் நீதிக்கான தேடல் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்ற வழமையான மறுப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆவணப்படத்திற்கு அடிப்படையாக...

ஜெனீவா கூட்டத்தொடர் இன்று : இலங்கை போர் குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை தாக்கல் ஆகிறது

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று(திங்கட்கிழமை) தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில்...

மெக்கா மசூதி மீது கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு

முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடிய அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபர் பணிநீக்கம்

ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடிய சிரியா அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபரை செய்தி சேனல் பணிநீக்கம் செய்து உள்ளது. சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக...

உலகின் மிகப் பெரிய சுவரோவியம்

நார்வே நாட்டில் NuArt street art festival என்ற பெயரில் தெரு ஓவியக் கலைஞர்களுக்கான திருவிழா, கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களில் ப்ரெஞ்சுக் கலைஞர்களான எல்லா மற்றும் பிட் இருவரும் சேர்ந்து வரைந்த “Lilith and Olaf” என்ற ஓவியம்தான் பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. காரணம்,...

சிறுவன் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து கண்ணீர் அஞ்சலி

துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த அகதி சிறுவன் அய்லானுக்கு பிரபல நடிகை உட்பட சமூக ஆர்வலர்கள் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை கூடியுள்ளனர்....

2 நாட்கள் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!

கணணி வீடியோ கேம் ஐ தொடர்ந்து 22 நாட்களாக விளையாடிக் கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ருஸ்டம் (Rustam) திடீரென உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 17 வயதுடைய ருஸ்டம் (Rustam) - கம்ப்யூட்டர் கேமில் மிகவும் ஆர்வம் மிக்கவன், வீட்டில் தனிமையில் இருந்ததால் அவருக்கு விருப்பமான 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' (Defence of...

கடலில் பலியான பிஞ்சுக் குழந்தை விவகாரம்: ஆட்டம் காணும் கனடா அரசு

கடலில் பலியாகி கரை ஒதுங்கி கிடந்த பிஞ்சுக் குழந்தை விவகாரத்தால் கனடா அரசு ஆட்டம் கண்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன்...

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பெற்ற ஐரிஷ் சகோதரிகள்!

அயர்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்துள்ளன. நான்காவது சகோதரி கர்ப்பமாக இருப்பதுடன் அவருக்கும் விரைவில் குழுந்தை பிறக்கவுள்ளது. இம்முன்று சகோதரிகளுக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாயோ நகரிலுள்ள காஸ்ட்லேபர் பிரதேசத்தின் மாயோ பொது மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றுள்ளனர். குறித்த பிரதேசத்தில் அருகருகே வசித்த குறித்த சகோதரிகள்...
Loading posts...

All posts loaded

No more posts