Ad Widget

உக்ரைனுக்கு சர்ச்சைக்குரிய குண்டுகளை வழங்கும் அமெரிக்கா: ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திடீா் சுற்றுப் பயணமாக உக்ரைனுக்கு வருகைதந்த போது, யுரேனியச் சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அவா் அறிவித்தாா். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு புதிதாக அளிக்கவிருக்கும் இராணுவ உதவிகளின்...

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க பிரித்தானியா அரசு திட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வாக்னர் கூலிப்படை மீது கொடூர கொலைகள், கைதிகளை சித்திரவதை செய்தல், சூறையாடுதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,...
Ad Widget

உக்ரைனுடன் மீண்டும் தானிய ஒப்பந்தம் கிடையாது: புடின் திட்டவட்டம்

தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்கான அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா கடந்த ஜூலை மாதம்...

பதவியிலிருந்து நீக்கப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்!!

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய பாதுகாப்பு அமைச்சராக உயர் பதவியிலிருந்த ரஸ்டெம் உமெரோவ் ஐ நியமித்துள்ளார். புதிய நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போருக்கு புதிய போர்வையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 57 வயதான ரெஸ்னிகோவ்,...

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நகரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ள விமானங்கள்!!

உக்ரைன் - ரஷ்யா போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,சுமார் 100 மேற்பட்ட விமானங்கள்...

மோசமான இரவை எதிர்கொள்ளும் புடின்! ட்ரோன் தாக்குதலினால் திணறும் ரஷ்யா!!

உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் நான்கு இராணுவ விமானங்கள் சேதமடைந்துள்ளமை ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கியதாக கூறப்படுகின்றது. எஸ்டோனியா மற்றும் லாட்வியாவின் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

ஜி20 மாநாட்டுக்கு அழைப்பு: மோடிக்கு பதில் வழங்கிய புடின்

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக ரஷ்ய தரப்பில் வெளியுறவு அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும்...

வாக்னர் கூலிப்படையினருக்கு புடின் பிறப்பித்துள்ள உத்தரவு!!

பிரிகோஜின் மரணத்திற்குப் பின்னர் ரஷ்யாவின் விசுவாச பிரமாணத்தில் கையெழுத்திட வாக்னர் கூலிப்படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியான நிலையில், கூலிப்படையினரை தன்னிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்குமாறும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க சேனல் NBAC-ன் அறிக்கையின்படி, புடின் வெள்ளிக்கிழமை உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்....

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது. மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் வர்த்தக விமானம், புறப்பட்டு 100 கிலோ மீட்டரில் வானில் இருந்து புகையுடன் கீழே விழுந்து நொறுங்கியது. 3 விமானிகளுடன் பயணம் செய்த 7...

புடினுக்கு எதிராக களமிறங்கிய வாக்னர் படை தலைவர் உயிரிழப்பு

புடினுக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்ட வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார். விமான விபத்தொன்றில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்வெர் பிராந்தியத்தில் உள்ள குசென்கினோ கிராமத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. இதேவேளை விபத்து நடந்த இடத்தில் எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில்...

ரஷ்யாவில் தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்!!

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் விமானமொன்று தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கே Soltsy-2 இராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த Tupolev Tu-22 போர் விமானமே இவ்வாறு தீக்கிரையானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Tu-22 போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் உக்ரைனில் உள்ள நகரங்களை...

ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் – முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ரஷ்யாவுக்கு இந்தப் போராட்டத்தில் நிலைத்திருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் காணவில்லை. போரின் முடிவு...

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்கள்: கூட்டிணையும் இரு நாடுகள்

நெதர்லாந்தில் இருந்து F-16 போர் விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை சந்தித்துள்ளார். உக்ரைன் இராணுவத்திற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிநவீன போர் விமானம் அமெரிக்காவின் ஒப்புதலுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறித்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் உக்ரைனுக்கு F -16 விமானங்களை வழங்க...

புடினின் இரகசியங்களை அறிந்தவர் மர்மமான முறையில் திடீர் மரணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய இரகசியங்கள் பல அறிந்த இராணுவ தளபதி மர்மமான முறையில் திடீரென்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினுக்கு சொந்தமான 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரண்மனை தொடர்பிலான இரகசியங்களை அறிந்த இராணுவ தளபதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவினை சேர்ந்த 69 வயதான ஜெனடி லோபிரேவ் என்ற இராணுவ...

மேற்கு ஆபிரிக்க கடற்பகுதியில் துயரம்! குடியேற்றவாசிகள் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

மேற்கு ஆபிரிக்காவின் கேப்வேர்ட்டின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 60 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. சிறுவர்கள் உட்பட 38 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது. செனெகல் சியாரோ லியோனை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் குறிப்பிட்ட படகில் பயணித்துள்ளனர் – ஒரு மாதகாலமாக இந்த படகு கடலில் காணப்பட்டுள்ளது என தகவல்கள்...

இரவோடு இரவாக ரஷ்யா செய்துள்ள அராஜகத்தை அம்பலப்படுத்திய உக்ரைன்

உக்ரைனில் உள்ள Danube நதித்துறைமுகத்தில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா நேற்றிரவு வான்வெளித்தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றிரவு, இரண்டு முறை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஒடிஷா பகுதி கவர்னரான Oleh Kiper தெரிவித்துள்ளார். தானியக்கிடங்குகளின் கூரைகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை...

500 நாட்களாக தொடரும் போர்: உக்ரைனின் இராணுவ வளங்கள் குறித்து ரஷ்யா வெளியிட்ட தகவல்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய போர் 500 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் இராணுவ வளங்கள் ஏறத்தாழ தீர்ந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், "மேற்கு நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பா) ஆயுத உதவி இருந்தபோதும் உக்ரைனால்...

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள கலுகா பகுதியிலும், மற்றொரு ட்ரோன் மாஸ்கோவின் முக்கிய சுற்றுச் சாலைக்கு அருகிலும் அழிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகா் மாஸ்கோவின் புகா் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் நேற்றுமுன்தினம் (09.08.2023)...

ரஷ்யாவின் தொடர் ஏவுகணை தாக்குதலில் அதிர்ந்த உக்ரைன்! ஏழு பேர் பலி – பலர் மாயம்

கிழக்கு உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது இரண்டு ஏவுகணைகள் நகரத்தைத் தாக்கியுள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். என அறிவிக்கப்பட்டுள்ளது. பொக்ரோவ்ஸ்க்...

உக்ரைனில் கொடிய ஏவுகணைகளை குவிக்கும் பிரான்ஸ்! நீண்ட தூர இலக்குகளை தாக்க திட்டம்

நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய SCALP ஏவுகணைகளை உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 525 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை தங்களுக்கு வழங்குமாறு மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை...
Loading posts...

All posts loaded

No more posts