Ad Widget

ரஷ்ய அதிபரின் மூளையாக செயற்பட்டவரின் மகள் குண்டுவெடிப்பில் பலி

ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் வெடித்து பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரும், புடினின் மூளையாகவும் செயற்பட்ட அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பத்திரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), நிகழ்ச்சி ஒன்றில்...

போர் பரபரப்பிற்கு மத்தியில் ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பும் சீனா

இந்தியா, பெலாரஸ், ​​மொங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் உட்பட, புரவலன் தலைமையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூட்டுப் பயிற்சியில் சீனாவின் பங்கேற்பு தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம்,...
Ad Widget

பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு விருது!!

பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற ரஷ்யா தாய்மார்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட அந்த விருதை மீண்டும் வழங்க ரஷ்ய அதிபர் புடின் முடிவு செய்துள்ளார். ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட கௌரவ விருதான 'Mother Heroine' விருதை மீண்டும் அறிவித்துள்ளார் ஜனாதிபதி...

பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டுகின்றது – ரஷ்யா கடும் குற்றச்சாட்டு

பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானியா தனது RC-135 உளவு விமானத்தை ரஷ்யா மீது பறக்க அனுமதி கோரியதாகவும், இது வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய வான்பரப்பில் எந்தவிதமான அத்துமீறல்களையும் தடுக்கும் பொறுப்பு ரஷ்யாவின் விமானப்படைக்கு...

எல்லை மீறிச் சென்ற பிரித்தானிய விமானம் – விரட்டி அடித்த ரஷ்ய போர் விமானம்!

பிரித்தானிய விமானம் ஒன்று ரஷ்ய வான்வெளியை மீறிச் சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் ஒன்று பிரித்தானிய விமானத்தை ரஷ்ய வான்வெளியில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேரண்ட்ஸ் கடலுக்கும் வெள்ளைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள கேப் ஸ்வியாடோய் நோஸ் அருகே ரஷ்ய விமான எல்லையை பிரித்தானிய உளவு விமானம்...

சீனாவில் புதிய வகை வைரஸ்!!

சீனாவில் கொவிட்-19 வைரஸ் போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும்...

மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் புதிய உறவு

துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் போக்கு தொடங்கியதில் இருந்தே பல்வேறு மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் மற்றும் இராஜதந்திர உறவு முறிவு ஆகியவற்றை அறிவித்து வருகின்றனர்....

இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க உக்ரைன் பெண்கள் செய்யும் காரியம்!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது. இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள் ஒரு வித்தியாசமான யோசனையை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, உக்ரைன் பெண்கள் தங்கள்...

ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது

ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் இயக்குனரான அலெக்சாண்டர் ஷிப்லியுக், ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொடர்பான இரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் என்ற இடத்தில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்கு ஒலியை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைபர்சானிக் விமான தயாரிப்பு ஆராய்ச்சி நடந்து...

இலங்கை தமிழ் அகதிகள் குடும்பத்திற்கு நிரந்தர விசாவை வழங்கியது அவுஸ்திரேலிய அரசாங்கம்

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர். இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள்...

நேட்டோ நாடுகளை சீண்ட வேண்டாம் – புடினுக்கு பகிரங்க மிரட்டல்

உக்ரைனை அடுத்து நேட்டோ நாடுகளை சீண்டினால், உண்மையில் ஒட்டுமொத்த கூட்டணியும் எதிர்வினையாற்றும் என நேட்டோ தலைவர் ரஷ்ய ஜனாதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்,...

ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதித்தது அமெரிக்கா!

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதன்படி, உலோக நிறுவனமான MMK மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய தொடர்புடையது என அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் புட்டினுடன் நெருங்கிய உறவைக்...

உக்ரைனின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது

ரஷ்யப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள சோவியத் கால நிலக்கரி எரியும் Vuhlehirsk மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய படையினர் ஒரு சிறிய தந்திரோபாய நன்மையை...

ஹைட்டியில் பெரும் கலவரம் – 471 பேர் வரையில் பலி

ஹைட்டியில் குழுக்களுக்கு இடையே இந்த மாதம் நடந்த கடுமையான மோதல்களின் விளைவாக குறைந்தது 471 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் சிறுவர்கள் கும்பல்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதும் பதிவாகியுள்ளது" என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று...

ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் ரஷ்யா – எரிவாயு விநியோகம் மேலும் குறைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக குறைப்பதாக ரஷ்ய எரிசக்தி நிறுவனமான Gazprom அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பிரதான குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை கடுமையாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. Nord Stream 1 குழாய் வழியில் மற்றொரு விசையாழியை நிறுத்துவதன் மூலம் நாளாந்தம் எரிவாயு உற்பத்தியை 20 வீதமாக குறைந்துள்ளது....

பாரிஸில் மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி ; 4 பேர் காயம்

பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூடு நேற்று திங்கட்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகரின் 11வது வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. அரோண்டிஸ்மென்ட் மேயர் துப்பாக்கிச் சூடு நடந்ததை உறுதிப்படுத்தியதோடு, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலின் பின்னணியில் உள்ள உள்நோக்கங்களை இந்த கட்டத்தில் எந்த உறுப்பும்...

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ஏவுகணைகள் மத்திய நகரமான வின்னிட்சியாவைத் தாக்கியதில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவின் தென்மேற்கில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மேலும் தொண்ணூறு பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ரஷ்ய ஏவுகணைகள் அலுவலகத் தொகுதியையும் குடியிருப்பு கட்டடங்களையும் சேதப்படுத்தியுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இதை...

இலங்கையின் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியோலில் நடந்த ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் தனது உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீதான...

ரஷ்யாவை எதிர்கொள்ள பல லட்சம் பலம் வாய்ந்த உக்ரைன் படையினர்

உக்ரைன் நாட்டின் தென் பகுதிகளை, ரஷ்யர்களின் ஆக்கிரமிப்பதில் இருந்து மீட்பதற்காக நேட்டோ ஆயுதங்களுடன் கூடிய பல லட்சம் பலம் வாய்ந்த இராணுவத்தைகளமிறக்க திட்டமிடப்படுவதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். கருங்கடல் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்டெடுப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது என்று அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார். கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யா முன்னேற்றம் அடைந்துள்ள...

ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் நெஞ்சில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2006 - 2007 மற்றும் 2012 - 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே....
Loading posts...

All posts loaded

No more posts