Ad Widget

ரஷ்யா தொடர்பில் உக்ரைனின் உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!!

முக்கிய தெற்கு நகரமான கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் எச்சரித்துள்ளார். சில ரஷ்ய பிரிவுகள் வெளியேறக்கூடும் என்று உக்ரைன் முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது கெர்சனை பாதுகாக்க தயாராகி இருக்கலாம் என்று புடானோவ் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்ய எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மாயையை உருவாக்க முயற்சிக்கிறது என்று அவர்...

மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகும் ரஷ்யா: நிலத்தடியில் உருவாகும் மாபெரும் மருத்துவமனை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...
Ad Widget

100 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66 குழந்தைகளும் உட்கொண்ட சிரப் மருந்து இந்தியாவின் மைதன்...

ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் இடைமறிப்பு – அமெரிக்க போர் விமானங்களின் செயலால் பதற்றம்

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்களன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாயன்று தனது அறிக்கை ஒன்றில்...

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறை

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறைப்படுத்துவதாக புடின் தெரிவித்துள்ளார். சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கின்றது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை...

உக்ரைனை இருளில் மூழ்கடித்தது ரஷ்யா!!

அண்மையில் ரஷ்யா மேற்கொண்ட பாரிய தாக்குதலின் பின்னர் உக்ரைன் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 7 முதல் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் கொருன்ஜி கூறினார். உக்ரைனின் 30 வீத...

ரஷ்ய இராணுவ தளத்தில் தீவிரவாத தாக்குதல் – 11 பேர் பலி – 15 பேர் காயம்

உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் இருவர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், சோவியத் தன்னார்வல வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும்...

தீவிரமடையும் போர் பதற்றம்! 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல்

தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8 மாதங்கள் கடந்த நிலையில் போர் தொடர்கின்றது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன்...

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. இலங்கையும் அவுஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும்...

புடினின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!

உக்ரைனின் சில பகுதிகளை சட்டவிரோதமாக இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைக்க முயற்சித்ததை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கண்டித்துள்ளது. அத்தடன், இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்...

உக்ரைன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு எரிசக்தியைச் சேமிக்க குடியிருப்பாளர்களை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்க உக்ரேனிய குடியிருப்பாளர்கள் அடுப்பு மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். திங்களன்று உக்ரைன்...

புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் – வெளியாகியுள்ள எச்சரிக்கை

உக்ரைன் அதிக நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றுவதால் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக உக்ரைனின் முன்னாள் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் எந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுகிறதோ அந்த அளவுக்கு விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என உக்ரைனின் முன்னாள் பிரதமர் அர்செனி யாட்சென்யுக் தெரிவித்துள்ளார்.. சர்வதேச ஊடகம்...

ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு உக்ரேனில் ரஷ்யர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய ஏழு குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும், அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கொழும்பை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதம் உக்ரேனியப் படைகள் கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தை மீட்டெடுத்த போது விடுவிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களும்,...

கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய கிராமத்தை கைப்பற்றியது உக்ரைன் படைகள்

உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டேவிடிவ் பிரிட் மீது உக்ரைனியக் கொடியை 35ஆவது கடற்படையினர் ஏற்றுவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது. அத்துடன், மற்றொரு ரஷ்ய இராணுவப் பின்வாங்கலை தொடர்ந்து, அருகிலுள்ள பல கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக...

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது – உறுதி செய்த அமெரிக்கா

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு...

மரண விளையாட்டை உடன் நிறுத்துங்கள் – புடினிடம் போப் பிரான்சிஸ் அவசர கோரிக்கை

போரை உடன் நிறுத்துங்கள் என்று போப் பிரான்சிஸ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் போப் புட்டினிடம் இது போன்ற கோரிக்கையை வைப்பது இதுவே முதல் முறையாகும். வன்முறை மற்றும் மரணத்தின் இந்த ஆபத்தான சுழற்சியிலிருந்து வெளியேறுமாறு போப் அழைப்பு விடுக்கிறார். (உக்ரைன் போரை நிறுத்துமாறு புடினிடம் போப் பிரான்சிஸ்...

உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, 93.11 சதவீத வாக்காளர்கள் ரஷ்ய இணைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், இது ஒரு முதற்கட்ட முடிவு என்று...

ரஷ்யாவில் இருந்து தப்பியோடும் ஆண்கள் – வெளியானது செயற்கைக்கோள் படங்கள்

ரஷ்யாவில் நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் ஜோர்ஜியாவை கடக்க காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. லார்ஸ் சோதனைச் சாவடியில் ரஷ்யாவிலிருந்து அதன் தெற்கு அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு எல்லையைக் கடக்க நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிராக போரிட இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி...

குத்தும் பையாக பயன்படுத்தப்பட்ட பிரித்தானியர் – ரஷ்ய படையினரின் கொடூரம்

ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுவிக்கப்பட்ட பிரித்தானிய போர்க் கைதி, தான் பல நாட்களாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜோன் ஹார்டிங், கிழக்கு உக்ரைனில் சுயாதீன பகுதியாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் காவலர்களால் குத்தும் பையாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார். மேலும், விசாரணைக்காக...

ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் – நூற்றுக்கணக்கானோர் கைது

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info...
Loading posts...

All posts loaded

No more posts