Ad Widget

இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றி

நேற்று இடம்பெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லவுள்ளதாக அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அஞ்சலோ மத்தியூஸ் இவ்வாறு குறிப்பிட்டார். ஒருநாள் மற்றும் ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் அணிக்கான தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின்...
Ad Widget

சனத் ஜெயசூரியவின் இன்றைய நிலை!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியவின் தற்போதைய நிலையையே படத்தில் காண்கிறீர்கள். 48 வயதான ஜெயசூரிய அண்மைக்காலமாகவே முழங்கால் உபாதையால் அவதிப்பட்டு வருகின்றார். அத்தோடு பிடிமானம் எதுவுமின்றி நடக்கக் கூட முடியாமல் தவித்து வருகின்றார். இதனால் முழங்காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்த ஜனவரி மாத முதல் வாரத்திலேயே மெர்பேர்னில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவுள்ளார்....

தேசிய இளைஞர் படையணி கிரிக்கட் போட்டியில் வடமாகாண அணி சாதனை

தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆற்றலை பரீச்சிப்பதற்காக முதலாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாபெரும் விளையாட்டு போட்டியில் ஆகக்கூடிய வெற்றிகளை வட மாகாண அணி பெற்றுள்ளனர். தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த விளையாட்டு போட்டி சமீபத்தில் திவலப்பிட்டிய தேசிய இளைஞர் படையணி விளையாட்டு மைதானத்தில்...

8 விக்கெட்டுக்களால் இலங்கை தோல்வி: தொடர் இந்தியா வசம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது. பகலிரவு ஆட்டமாக விசாகப்பட்டனத்தில் தொடங்கிய நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. எனவே, குணதிலக மற்றும் உபுல் தரங்க ஆகியோர்...

இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி

தனது அபாரமான துடுப்பாட்டத்தால் இலங்கைப் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த ரோகித் ஷர்மாவின் இரட்டைச் சதத்தால், இலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, இந்தியாவை துடுப்பாடப் பணித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர். ஆரம்பம்...

விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள்

இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள். கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது.இந்த நிலையில் நேற்று திருமணம் முடிந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்...

இந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு இருபது...

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே : இந்திய மருத்துவ நிபுணர்

புதுடில்லியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர வளிமண்டலம் பெரிதும் மாசுபட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மிகவும் மோசமான விதத்தில் வளி மாசுபட்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கையும் வாயையும்...

இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சாஹா, அஸ்வின், ஜடேஜா, ரோகித்சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்...

இருபதுக்கு இருபது தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்களை...

பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

முதலாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி இலங்கை தமது துடுப்பாட்டத்தின் போது 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி...

இலங்கையை 32 வருடங்களின் பின் வயிட்வோஸ் செய்த பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிள்ளது. நேற்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. எனினும், பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை 26.2 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை வீரர்கள் 103 ஓட்டங்களை...

நேற்றய போட்டியிலும் பாகிஸ்தானே வெற்றி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதனால் 4 -0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 43.4 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன 62...

பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது

இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டங்களை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் பாக்கிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது....

பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி!! இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி!!

2 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் தமது துடுப்பாட்டத்தின் போது 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 48 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் ஈட்டியது. உப்புல் தரங்க 112 ஓட்டங்களை அணிக்காக...

83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கை அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில்...

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. பகலிரவாக நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து,159.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 482 ஓட்டங்களை பெற்றது. இலங்கை...

அபுதாபியில் வரலாற்று வெற்றியை சுவைத்தது இலங்கை!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று சுழலும் ஆடுகளத்தில் 136 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கையின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களுக்குள் சுருண்டு மடங்கியது. இதனால் இலங்கை அணி 25 ஓட்டங்களால்...

ஆஸிக்கு எதிரான தொடர் இந்தியா வசம்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி தொடரை தன்வசப்படுத்தியது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என தொடரில் முன்னிலைபெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும்...
Loading posts...

All posts loaded

No more posts