Ad Widget

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் மாற்றம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் விண்டீஸ் (Windies) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இடம்பெற்றது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

மழை காரணமாக ஆஸி. நியூசி. இடையேயான போட்டி கைவிடப்பட்டது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக குப்தில், ரோஞ்சி களமிறங்கினர். 6-வது ஓவரின் போது 40 ரன்களை சேர்த்திருந்த நிலையில், 26 ரன்களை குவித்திருந்த குப்தில்...
Ad Widget

வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் தேர்வு செய்தது....

சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு? கோலாகலமாக இன்று ஆரம்பம்; 8 அணிகள் களத்தில்

8 நாடுகள் பங்­கேற்கும் சம்­பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று இங்­கி­லாந்தில் ஆரம்­ப­மா­கின்­றது. இந்தத் தொடரின் முதல் போட்­டியில் ‘ஏ’ பிரிவில் இடம்­பெற்­றுள்ள இங்­கி­லாந்து மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் மோது­கின்­றன. ‘மினி உலகக் கிண்ணம் என்று அழைக்­கப்­படும் ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணம் 1998ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. 1998ஆம் ஆண்டு பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற முதல்...

Red Rose with Drops Close Up

This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...

Grossglockner Road in Austria

This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...

சக வீரர்களுக்காக குளிர்பானம் ஏந்திய டோனி : ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், தற்போதைய வீரருமான மகேந்திரசிங் டோனி மைதானத்திலிருந்த இந்திய அணியின் வீரர்களுக்கு குளிர்பானங்கள் கொண்டுவந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியின் போதே டோனி குளிர்பாணங்களுடன் மைதானத்துக்குள் நுளைந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர். உலகில்...

கிரிக்கட் விளையாடிய வீரர் பலி!

ஐதராபாத்தில் கிரிக்கட் விளையாடும் போது காயமடைந்த இளம் வீரர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிர் ஆலம் இத்கா என்ற உள்ளூர் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாடினர். ஒரே மைதானத்தில் பல குழுக்களாக இளைஞர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு குழுவில் இடம்பெற்றிருந்த வாஜித் என்ற இளைஞர், எதிரணி வீரர் அடித்த...

கோலியின் ரசிகையாக மாறிய ஜான்டி ரோட்சின் மகள்

தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் இந்தியா மீதுள்ள நேசத்தின் காரணமாக தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தார். அவரது செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாள். விராட் கோலி போஸ்டரின் பின்னணியில் தனது மகள்...

மாளிங்கவும் அவரது அணியும் ஐ.பி.எல். சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுக்களைப் பெற்ற முதலாவது பந்து வீச்சாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாளிங்க சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தில்லி டெயா டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாளிங்க வீழ்த்திய 02 விக்கெட்டுக்களுடன் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. லசித் மாளிங்க இதுவரையில் 105 ஐ.பி.எல். போட்டிகளில் கலந்துகொண்டு...

தெரிவுக்குழு தலைவர் பதவியிலிருந்து அரவிந்த டி சில்வா இராஜினாமா?

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரவிந்த டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார். எவ்வாறாயினும் அவரின் பதவி விலகலை...

மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன் : அலன் டொனால்ட்

மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­கராக குறு­கிய காலத்­திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார். இலங்கை அணிக்கு...

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் அலன் டொனால்ட்!

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ணத்தை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கை அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக சம்பிக்க ராமநாயக்க செயற்படுகிறார்.இந்நிலையில் எலன் டொனால்ட் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக...

முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவம் இல்லை: ஜயவர்தன

தான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லையென்பதாலேயே இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹில்ல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு துடுப்பாட்ட ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் உள்ள மஹில்ல ஜயவர்தன, இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை...

சங்காவிடம் சச்சின் கேட்டது என்ன ?

தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காருக்கு வாழ்த்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் பிறந்ததின பரிசொன்றை சச்சின் கேட்டுள்ளார். கடந்த 24 ஆம் திகதி சச்சின் டெண்டுல்கார் தனது 44 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் குமார் சங்கக்கார டுவிட்டரில் சச்சினுக்கு...

டில்ஷான் சரணடைந்தார்: வழக்கும் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரட்ண டில்ஷானைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (25) இரத்துச் செய்தது. தனது முந்தைய மனைவியான நிலங்கா விதாங்கிக்கு மாதாந்தப் பராமரிப்புப் பணமாக 20,000 ரூபாயையும் தனது மகனுக்கான காப்புறுதிப் பணத்தையும் டில்ஷான் செலுத்தி வந்தார். அந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமாக,...

தில்ஷானை கைது செய்ய உத்தரவு

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன தில்ஷானை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்றிற்கு தில்ஷான் முன்னிலையாகாத காரணத்தால் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் ,...

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும்...

அதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக்கூடிய உயர்வான விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணி மீதொட்டமுல்ல விஜயம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் இன்று காலை மீதொட்டமுல்ல பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதி ஏற்பட்ட குப்பை மேட்டு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கவும், அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அம்மகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கிலும் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களின் முகாம்களுக்கு விஜயம்...
Loading posts...

All posts loaded

No more posts