Ad Widget

காணிகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரிடமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இடம்பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சிறுவர் இராஜாங்க...

தீர்வுடன் மீண்டும் சந்திப்பேன்: முள்ளிக்குளம் மக்களிடம் வட. மாகாண ஆளுநர் உறுதி

முள்ளிக்குளம் மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து, விரைவில் சிறந்த தீர்வுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன் என வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட வட. மாகாண ஆளுநர், அங்கு மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை...
Ad Widget

பலாலி விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளை விடுவிப்பது பற்றி தீர்மானமில்லை

பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

நில மீட்பு போராட்டத்தை கைவிடாதீர் : முதலமைச்சர் ஆலோசனை

மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றயதினம் கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும்,...

காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் உள்ளது

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும்...

கேப்பாப்பிலவு மக்களுக்கு மாற்றுக் காணிகளே வழங்கப்படும்: இராணுவம் திட்டவட்டம்

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும்...

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு கள விஜயம்!

வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று...

எமது போராட்டத்திற்கு வலுசேர்க்க மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளனர்: கேப்பாப்பிலவு மக்கள்

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமது போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு பதவிகளை துறந்து போராட வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தமது...

மீள்குடியேற்றம் விரைவில் இடம்பெறும் : புதிய கட்டளைத்தளபதி

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி நேற்று (11) மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து புதிய கட்டளை...

கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட அடுக்கு மாடியைத் தக்கவைக்க இராணுவம் முயற்சி!

பாதுகாப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கட்டடம் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு அங்குள்ள மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், மக்களுக்கு மாற்றுக் காணிகளும் பணமும் வழங்குவதற்கு அரச அதிகாரிகளுடன்...

தகவல் வழங்கியும் பொலிஸார் வரவில்லை : மக்கள் விசனம்

நீர்வேலி, மாசியன் சந்தி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தும் பொலிஸார் அசட்டையுடன் நடந்து கொண்டதாக, பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நவக்கிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) நிகழ்வு ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரை, பொல்லால் தாக்கி விட்டு அவரது மகள் அணிந்திருந்த 1...

மீள்குடியேற்றத்திற்கு இராணுவமே தடையாக உள்ளது; வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் தொடர்ந்தும் பெருமளவில் நிலைகொண்டுள்ள இராணுவம் உட்பட அரச படையினரே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி டெல் தலைமையிலான பிரதிநிதிகள் வட மாகாண முதலமைச்சரை சந்தித்த போது...

வலி. வடக்கில் 28.8 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் நிலப்பரப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (07) இராணுவத்தினரால், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பகுதி, கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்தது. மக்களின்...

மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே காணிகள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே வடமாகாணத்தின் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி வடமாகாண சபையில் நேற்று (வியாழக்கிழமை) பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை!

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட...

இராணுவம் காணிகளை விடுவித்தால்தான் பொலிஸாராலும் விடுவிக்க முடியுமாம்!

உயர் பாதுகாப்பு வலயத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ளார்கள். அந்த காணிகளை விடுவித்தால் தான் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் மக்களுடைய காணிகளை தம்மால் விடுவிக்கமுடியும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான சிவில் பாதுகாப்பு கூட்டம் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொலிஸார்...

முல்லைத்தீவில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த குழுவினர் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளையும் பார்வையிட்டனர். முல்லைத்தீவில் - கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று முப்பத்து ஆறாவது நாளாக...

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு...

விடுவிக்கப்படும் காணிகள் எம்முடையதல்ல; கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம்

முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மக்களுடைய காணிகள் உள்வாங்கப்படவில்லை என நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று 32 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு

கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர்...
Loading posts...

All posts loaded

No more posts