Ad Widget

அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் விடுவிப்பு

அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த தனியாருக்குச் சொந்தமான் வீடுகள் மற்றும் காணிகள் என்பன நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமான விடுவிக்கப்பட்டுள்ளன. (more…)

வலி வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வு

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து நேற்று புதன்கிழமை ஆராயப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

வலி வடக்கில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: சஜீவன்

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சன்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் 13 படைமுகாம்களுக்கு மூடுவிழா! காணிகளும் மீளளிக்க ஏற்பாடு!:யாழ். கட்டளைத் தளபதி

யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

மாதகல் சம்பு நாதேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் வழிபாடுகள்

கடந்தகால வன்செயல்களின்போது அழிவடைந்து காணப்பட்ட மாதகல் சம்பு நாதேஸ்வர ஆலயத்தில் நேற்று புதன்கிழமை மீண்டும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகின. (more…)

தேர்தலுக்கு முன்னர் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்' என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றகுழு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

அக்கரை கிராமம் இராணுவத்தால் விடுவிப்பு

யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. (more…)

நாளை மயிலிட்டியில் 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை வியாழக்கிழமை 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

ஆலய வழிபாட்டுக்காக சென்ற மக்களுக்கு அனுமதி மறுப்பு

மயிலிட்டியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை சென்ற மக்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு உட்பட்ட மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. (more…)

வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக செயற்பட சட்டத்தரணிகள் சங்கம் தயார்

வடக்கில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)

காணியை மீட்டுத் தாருங்கள் -கெற்பேலி பொதுமக்கள்

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

எழுதுமட்டுவாழில் இந்து மயானத்தை அபகரிக்க படையினர் முயற்சி! மக்கள் எதிர்ப்பு

எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

காணிகளுக்கு நட்டஈடுகள் வழங்கும் அறிவித்தல் வந்தது?

வலி. வடக்கில் படையினரின் சட்டவிரோத காணி அபகரிப்புக்கு எதிராக மக்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கப்படாமலே (more…)

காணி பறிப்பு அறிவிப்பை மீளாய்வு செய்ய அறிவுறுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன்

வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், (more…)

வலி.வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 3 ஆண்டுகளில் இரு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (more…)

காணி பறிப்புக்கு எதிராக திக்கம் மக்களும் வழக்கு

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் திக்கம் பகுதியில், இராணுவ முகாம் அமைப்பதற்குத் தங்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகக் காணி உரிமையாளர்கள் 31 பேர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர். (more…)

உடுப்பிட்டியில் முகாமில் தங்கியுள்ள வலி. வடக்கு மக்களை வெளியேறுமாறு காணி உரிமையாளர் தாக்குதல்!

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

வலிகாமம் வடக்கு மக்களின் வழக்கு விசாரணைக்கு வருகிறது

வலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. (more…)

காணி சுவீகரிப்புக்கு எதிராக 1,474பேர் ரிட் மனு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர், நேற்று புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts