Ad Widget

பலாலியில் 137 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி

மீளக்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி வடக்கில் 137 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெல்லிப்பழை பிரதேசச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் 8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அன்ரனிபுரம் பகுதியில் 30 வீடுகளின் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணியில் கட்டப்பட்ட 107 வீடுகளின் பணிகளும்...

கீரிமலை வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

கீரிமலையில் காணி இல்லாதவர்களுக்கு, காணியுடன் கூடிய வீடமைக்கும் பணி, இராண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை அண்டிய அரச காணியில், ஏற்கெனவே 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த வீட்டுத்திட்டத்துக்கு “நல்லிணக்கபுரம்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, முகாம்களில்...
Ad Widget

மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு!

யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போது வரை 4600 ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள்...

பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைத்து கொடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களின் ஊடாக பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வவுனியா, கற்பகபுரம் கிராமத்தில் 370 குடும்பங்களுக்கு...

மயிலிட்டி உட்பட இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்!

மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்பு, விவசாய மற்றும் கடல்தொழில் சார்ந்த இடங்கள் யாவும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பகுதியை...

யுத்தத்திற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் குடியமர்வு!

யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்திற்கும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத்தின்படி, 42 ஆயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர். இதன்பிரகாரம்...

வடக்கு முஸ்லிம்களில் 2801 பேர் மட்டுமே இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை -முதலமைச்சர்

வடக்கிலிருந்து 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் எனினும் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்வரை வடக்கில் 26ஆயிரத்து841 முஸ்லீம்கள் மீள் குடியேற்றத்திற்கு விண்ணப்பித்ததாகவும், அவற்றில் 24 ஆயிரத்து 40 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டதாகவும் இரண்டாயிரத்து 801 பேர் மட்டுமே இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என்றும் வடக்கு முதலமைச்சரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட 4...

முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது -அஸ்மின்

“வடமாகாண முதலமைச்சர் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது" என வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார் “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதல்வர் முன்வைக்கும் கருத்துக்கள் தரவுகள் அனைத்துமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும். வடக்கு மாகாணசபையில் முழுநாள் விவாதமொன்று நடாத்தப்பட்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நிலைப்பாடுகளும் கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படல் அவசியமாகும்...

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த கடை உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடும்...

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது!

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டியை பொதுமக்களிடம் கையளிக்கக்கூடாது எனவும் அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை இந்த அமைப்பைச் சேர்ந்த படையதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணிநேரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக்...

பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வடமாகாண சபையின் உறுதியான தீர்மானம்

பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வட மாகாண சபையின் உறுதியான தீர்மானம் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வட மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...

போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டதை பெற உரித்துடையவர்கள்

போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும், இந்த வீட்டுத் திட்டத்தைப் பெற பொருத்தமானவர்கள் என சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ள முன் நிர்மாணிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதல் கட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலையே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,...

வலி.வடக்கில் மக்களுக்கான கட்டிட அனுமதி வழங்கப்படாததால் வீட்டுத் திட்டத்தில் தாமதம்!

வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக் கட்ட 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இது தொடர்பில் குறித்த பிரதேச சபைக்குட்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவிக்கையில், வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேறும்...

பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்று காலை 8.30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், ஆரம்பமாகியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65...

தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல் எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபை உட்பட பல்வேறு சமூக அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், வடக்கு மாகாணத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தைப் புறக்கணித்து பொருத்து...

வடக்கில் 10,000 பொருத்துவீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மூத்த அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி கொழும்பிலுள்ள ஆங்கிலக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பொருத்து வீடுகளை அமைத்துதருமாறு மக்கள் கோருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிப்படுத்திய...

வலுகட்டாயமாக பொருத்து வீடுகளை வழங்க வேண்டாம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களால் விரும்பப்படாத பொருத்து வீடுகளை, வலுகட்டாயமாக அவர்களுக்கு வழங்குவதற்கு, மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு, 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வீடுகள் தொடர்பில், பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை தொடர்பில், அவரிடம்...

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அடப்பன்குளம் மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என கோரி இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடப்பன்குளம் அம்மன் கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காத 20பேர் வரையில் கலந்து கொண்டுள்ளனர். தமது கிராமத்திற்கு வழங்கப்பட்ட...

வடக்குக் கிழக்கில் செங்கற்கள் பயன்படுத்தி வீடுகள் கட்ட உத்தேசம்!

வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பதில் தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்....

மாற்றுக் காணிகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட 42 குடும்பங்களின் காணிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட மாற்றுக் காணிகளை தாம் வாங்கப்போவதில்லையென அக்குடும்பங்கள் தெரிவித்துள்ளனர். தம்மால் கையகப்படுத்தப்பட்ட 59 குடும்பங்களின் காணிகளை விடுவிப்பதாகவும் ஏனைய 42 குடும்பங்களுக்குரிய காணிகளை தாம் வழங்கப்போவதில்லையென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Loading posts...

All posts loaded

No more posts