Ad Widget

கேப்பாப்பிலவு போராட்டம் : சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்!

சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் இன்று (சனிக்கிழமை) 12ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாப்பிலவு மக்களின் இம் மண்மீட்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு சென்று தமது...

புதுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதாக ரணில் உறுதி!

அரச காணிகளை இராணுவத்தினரின் தேவைக்குப் பெற்றுக்கொண்டு மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் உறுதியளித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் நேற்றையதினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பின்போது விரைவில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிறீலங்காப்...
Ad Widget

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு!

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தென்னிலங்கை சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 11ஆவது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இம்மக்களை தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தேசிய மீனவர் இயக்கம், பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள்...

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு!

புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முதல் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக முன்னெடுதிருந்த நிலையில் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று ஒன்பதாவது நாளாக கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறுகோரி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்....

முகாம்களிலிருந்து வெளியேற மக்கள் முன்வரவில்லை என்கிறார் சுவாமிநாதன்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாம் மூடப்பட்ட போதிலும், 97 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முன்வரவில்லையென்றும், முகாம் காணப்பட்ட இடத்தின் அருகிலேயே அவர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பூந்தோட்டம் நலன்புரி முகாம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...

போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாது

வடக்கிலுள்ள ராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன் அரசியல் பின்புலத்துடன் நடத்தப்படும் போராட்டமே கேப்பாப்பிலவு போராட்டம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன்...

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு!

தமது காணிகளைப் பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் சில சிங்கள மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு தமது முழுமையான...

பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு!! ; பிள்ளைகள் எச்சரிக்கை!!

கோப்பாபுலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா விமானப்...

ஊறணி மக்களை ஏமாற்றிய இராணுவம்!

அண்மையில் யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊறணி பிரதேசத்தின் இறங்குதுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 500 மீற்றர் நிலப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்த போதிலும் குறித்த நிலப்பகுதியை மக்களிடம் ஒப்படைக்காது 500 மீற்றர் கடற்பகுதியை மாத்திரமே இராணுவம் மக்களிடம் ஒப்படைத்துள்ளதாக வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய...

காணிகளை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்: கேப்பாப்பிலவு மக்கள்

படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான...

முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம்...

யாழ் ஊறணி கரையோரம் விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதியே கையளிக்கப்பட்டுள்ளது. ஊறணி பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை. இதனையடுத்து தேசிய...

சம்பந்தனும், சுமந்திரனும் பேப்பட்டம் கட்ட முயற்சிக்கின்றனரா?; மக்கள் கடும் விசனம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பேப்பட்டம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனரா? என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு புலக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை சம்பந்தனோ? சுமந்திரனோ? தொலைபேசி ஊடாகவேணும் தொடர்பு கொண்டு கலந்துரையாடவில்லை எனவும்...

கேப்பாப்பிலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் தொடர்கிறது

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விமானப்படையினரும் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்குச்...

சுதந்திரதினத்திலும் மக்கள் போராடவேண்டியுள்ளது!

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார். கேப்பாபுலவு - புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மக்களின் பிரச்சினை தொடர்பில், விமானப்படையினரிம் கலந்துரையாடுவதற்காக, வட மாகாண...

இராணுவம் வெளியேறாவிடின் தீக்குளிப்போம்; புதுக்குடியிருப்பு மக்கள்

இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது....

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி தங்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி...

பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்று; மற்றுமொரு போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் புதுக்குடியிருப்பு பிரசெயலக நுழைவாயிலை வழிமறித்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் பனியிலும் இரவோடுஇரவாக 2 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை....

நாவற்குழி வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

நாவற்குழியில் உள்ள, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள 250 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை இடம்பெற்றது. யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். பல வருடங்களாக, அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய...
Loading posts...

All posts loaded

No more posts